Saturday, August 6, 2011

உலகசரித்திரத்தையே மாற்றியமைத்த ஹிட்லர்

ஹிட்லர் ஆரம்பித்துவைத்த இரண்டாம் உலகப்போர் காவு வாங்கியது எவ்வளவு உயிர்களைத் தெரியுமா சுமார் ஆறரைக் கோடி பேர்!


இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இறந்தவர்களில் சுமார் ஜந்து கோடிப் பேர் எந்த வம்புக்கும் போகாத பொதுமக்கள்!
போரினால் இறந்தவர்களின் கதைகளைவிட ஹிட்லர் தன் நாட்டின் சொந்த மக்களுக்குச் செய்த இனப்படுகொலை பொடுமையானது.இதைப்பற்றி இப்போது கேட்டாலும் ஈரக்குலை நடுக்கம் எடுக்கும்!



யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் போல ஒரு கொடுமை உலக சரித்திரத்தில் இதுவரை நடந்தது இல்லை யூதர்களைக் கொலை செய்வதற்க்கு என்று தனி அமைச்சகம் யூத மக்களைக் கொலை செய்வதற்க்கு என்றே நாடு முழுவதும் மரணத் தொழிற்சாலைகள் ..நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டாயிரம் யூதர்கலை கொன்று குழியில் வைக்கவேண்டும் என்று இலக்கு..


இந்த மரணத் தொழிற்சாலைகளில் கொன்று குவிக்கப்படும் யூதர்களை நாசிப்படையினர் கனக்கு வைத்துக் கொள்ளும் முறை மிகவும் சவாரசியமானது கைதாகும் போதே யூதர்களின் கை அல்லது கால்களில் செப்பு வளையம் மாட்டப்படும் .பல சித்திரவதைகளுக்கு பிறக அவர்கள் கொல்லப்பட்டதும் பிணங்கள் மொத்தமாக ஒரிடத்தில் குவிக்கப்பட்டு கொளுத்தப்படும் .அவர்கள் சடலங்கள் சாம்பல் ஆனதும் சாம்பலில் இருந்து பிரித்தெடுக்கும் வலையங்களின் எண்ணிக்கையை வைத்து இன்று எத்தனை பேரைக் கொன்றோம் என்று நாஜிப்படை கணக்கு எழுதிக்கொல்லும்


 நினைத்துப்பதத்க்கவே நடுக்கம் எடுக்கும் ஹிட்லரின் மிருகத்தனமான ஆட்சியில் இறந்து போன யூதர்களைவிட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்ட யூத மக்கள் பட்ட சித்திரவதை அதிகம்
சரி ஹிட்லருக்கு யூத மக்கள் அப்படி என்னதான் துரோகம் செய்தார்கள்?
ஹிட்லர் தனது நாஜி கட்சியினரிடையே கேள்வி பதில் பாணியை ஆற்றிய இந்த உரையைக் கேளுங்கள்
“எனதருமை ஜெர்மன் நாட்டு மக்களே…முதல் உலகப்போரில் நாம் தோல்வி அடைந்தோம் .நம் வசம் இருந்த நிலப் பகுதிகளை இழந்தோம் எதிரி நாடுகளுக்கு போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொண்டுஇருப்பது இப்போது அதற்க்கு நஷ்ட ஈடு பொடுக்கிறோம்!இந்தக் கடன் சுமை நமது வசதிகளைப் பறக்கின்றது !நமது தலைச்சுமையைக் கூட்டுகின்றது அத்தோடு இது நமது சுய கௌரவத்தின் மீது சகதி வாரி அடிக்கின்றது இதற்க்கு யார் காரணம்?
“ஆட்சி முறை!”இது ஹிட்லரினால் மூளைச்சலவை செய்யப்பட்ட கட்சியின் கோஷம்!
இந்த ஆட்சிக்கு பின்னனியில் இருப்பவர்கள் யார்?
“யூதர்கள்”
“இந்தத் துரோகிகளின் பிரச்சனைக்கு நாம் கடைசித் தீர்வு கன்டாக வேண்டும்”



என்று ஹிட்லர் கட்டளையிட கட்சித் தொண்டர்கள் இனவெறிடும் கொலை வெறியுடன்
அந்த இடத்தை விட்டுப்புறப்படுவார்கள்.
மனிதர்களைக் கொல்ல எத்தனை முறைகள் இருக்கின்றதோ அத்தனை முறைகளையும் ஹிட்லரின் படை யூதர்களைக் கொல்லக் கையான்டது !இதில் “காஸ சேம்பர்” முறை விசித்திரமானது பிடிபடும் யூதர்களை ஆடைகளை எல்லாம் கலையச்சொல்லி “போய் குளித்து வரச்சொல்லி நாஜிப்படை கட்டளை இடும்அதன் பின் இவர்களை ஒர் அறைக்குள் அனுப்புவார்கள் அத்தனை கதவுகளும் சார்த்தப்பட்டு விஷப்புகை திறந்து விடப்படும் அடுத்த சில நிமிடங்களில் குளியல் அறை பிண அறையக மாறியிருக்கும்
பிடிபடும் அத்தனை யூதர்களுக்குமே இது மாதிரி சுலபமான மரணம் கிடைத்து விடாது .



சுண்டெலியை வைத்து சோதனை செய்வது போல யூதர்களை வைத்து பல மருத்துவ பரிசேதனைகள் நடத்தப்பட்டன!
ஜேர்மன் நாட்டில் வாழும் யூதர்கள் என்று இல்லாமல் தான் கைப்பெற்றும் நாடுகளில் வசிக்கும் யூதர்களையும் ஹிட்லரின் நாஜிப்படை கொன்று வெறியாட்டம் ஆடியது 1943ம் ஆண்டு வார்ஷா நகரில் நாஜிப்படைகளை எதிர்த்து கைதிகளாக பிடிபட்ட யூதர்கள் பொங்கி எழுந்தாளர்கள்!
இந்த சம்பவத்தில் நாஜிப்படையின் சிலர் கொல்லப்பட்டனர்  இதற்க்கு பதிலடியாக படையெடுத்துவந்த நாஜிப்படை 56000 யூதர்களை  ஒரே இடத்தில் வைத்து தீயிட்டு பொசுக்கியது 1945ம் ஆண்டு அமெரிக்கத் துருப்புகள் ஜெர்மனியில் காலடி எடுத்துவைத்த பிறகே யூத இனம் பட்ட அத்தனை அவஸ்தைகளும் உலகின் கண்களுக்கு முழுமையாக தெரியவந்தன.
Add caption

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls