Wednesday, February 15, 2012

மூர்த்தி

வெயிலில் உலர்ந்து வாடிய உடலும்
துவைக்காத உடையும்
மழிக்காத தாடியும்
வாராத தலையுமாக

மூர்த்தி என்ற இளைஞன்
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டான்
கண்களில் மட்டுமல்ல நகத்து நுணி வரை துயரம் பொங்கி வழிகிற தோற்றம்எதிராளியைக் கூட வலுவாகத் தாக்கும் சோகம்..
12/02/2012
9.25am

Wednesday, February 1, 2012

இந்தியாவில் நாம்-கலாட்டாக்காலம்

இந்த பயணத்தை எழுத இரவில் வெளியே பார்த்திருந்தேன் இருளில் ஒன்றும் தெரியாததினால் தான் எனக்கு எண்ணம் ஏதுவும் வரவில்லை அதானால் தான்; வார்த்தைகள் ஏதும் வழிக்கோலவில்லை அத்தனை அழகான காலங்கள் அந்த இனிமையான நினைவுகள் வாசனையோடு என்றும் நினைவிருக்கும்.


நாம் தாண்டி வந்த நாட்களின் கீறல்கள் எம் மனதில் அடியாளத்தில் கோடு போல் பதிந்துவிட்டன நாம் அவர்களுடன் இருந்த அந்த 15 நாட்களும் கனப்பொழுதில் மறைந்து போகாது மனங்களிளே பல மாற்றத்தை ஏற்படுத்தி பயணத்தில் புது வசந்தத்தினை நுகர்ந்து கொண்டோம்
பல எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாய் ஒக்டோபர் 16ம் திகதி MRTC யில் ஒன்று கூடினோம் 9.20am  பஸ் கொழும்பை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை விட்டு எத்தனையோ தடைவை வெளியேறியுள்ளேன் ஏதோ இப் பயணம் தனிமைப்படுத்துகின்றது என்பதை நன்பர்களுடன் இருந்தும் உணர்ந்து கொன்டேன் நேரம் செல்லச்செல்ல பஸ்சுக்குள் சத்தம் தெருவைப் பிளந்தது சுமார் 11 மணி நேரம் எவ்வாறு கழிந்தது என்றே தெரியாமல் தலைநகரை இரவு12.45க்கு சென்றடைந்தோம்.


விமான நிலையத்திற்க்கு வெளியே வாகனத்தரிப்பிடத்தில் 2மணி நேரம் காத்திருந்தோம்.

காற்றின் மென்மையான வருடல்.அங்குள்ள தெருவிளக்கைத்தாண்டி தன்னை இனம் காட்டும் சந்திரனின் பொன்னான ஒளி. ஜில் என சிலிர்க்க வைக்கின்ற பணியின் அட்டகாசம்.அடுத்தடுத்து வானில் பறக்கும் விமானங்களின் இரைச்சல்கள். இதமான அந்த நடு இரவில் மரத்திடியில் உள்ள கதிரையில்..ஈர விழிகளுடன் பல நட்புகள் என் அருகே....தொலைபேசி அழைப்பின்னூடாக தகவலை பரிமாரிக்கொள்கின்றனர் வீட்டாருடன்


புரியுது உங்க MIND VOICE இவ்வளவு நேரமும் ரொம்ப வதச்சிட்டனோ? (என்ன கேள்வி அது தானே உன்மை)OK OK எனி நாம STORY வந்திடலாம்.

எல்லாருமே செம TIRED   ஒரு நாள் கொழும்பில் தங்கிட்டு அடுத்தநாள் இந்தியாக்கு போவம் எண்டு நம்பி தானே போனம் கண்ண முளிச்சுப் பார்த்த AIRPORT அப்பிடியே Shork அகிட்டோம் எக்கனமே கன்னக்கட்டுது இதுக்க Meeting  வேற.(சாவடிகிறாங்களேய்யா)

இந்த meeting கே over  அதில  mints   ஐ note பன்னுறதுக்கு ஒரு group  வேற.

இந்தியாக்கு போய் வரும் வரையும் girl's க்கு முன்று பேர பொறுப்பா விட்டாங்க.. விட்ட அந்த மூன்று பேரும் யார் தெரியுமா ஆப்பு NO 1 மறீன்...அப்டியே ஜஸ்வரியா கௌசி...நாம விடுவமா மறீன வச்சு மொக்க போட்டம். அதெப்பிடி மறீன் எங்களுக்கு பொறுப்பு தன்னையே பாத்துக்க கானல..

இத விட கொடும 10 Condisition வேற சின்னப்புள்ளதனமா தான் இருக்கும் Follow பன்னுறது தாங்க ரொம்ப கஸ்டம்.

condisition  NO 01:- எத பேசினாலும் அந்த முண்று பேரிட்டயும் கேட்டுட்டுத்தான் பேசனும்

Madras university  இருந்தோ இல்ல classல   இருந்தோ எழும்பி வெளிய யாராவது போனால் 2 பேர் கூடவே போகனும்

(எங்க போனாலுமா)

Friends  ஒன்றா ஒரே room  ல இருக்கக்கூடாது
Dairy  dialy  எழுதி  Sir  கிட்ட  Singnature  வாங்கனும்
(என்னும் இருக்கன்னு Feelings )

மறீன் Girlsக்கு பொறுப்பாம் அவ என்ன சொன்னாலும் கேக்கனும்

(தூக்கில தொங்க சொல்லியிருக்கலாம் இத விட)

இப்பிடியே List நீண்டு கொன்டே போகுது

அந்த முண்று பேரும் அதுதாங்க மறீன் ,ஜஸ் கௌசி ....கொசு கூட குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கிற Time 1 மணி பனியோ எங்கள பதம் பாக்குது இந்த மூண்று பேரோட விரிவுரை
 ‘நீங்கள் இந்தியாவில எப்படி இருக்கனும்’

((தெரியாம தான் கேக்கிறன் இது எங்களுக்கு தெரியாத இல்ல இவங்க சொன்னா மட்டும் அப்பிடியே கேட்டுடுவமாக்கும்)

Classலயே சும்மா இருக்க மாட்டம் விட்டமா இவர்களின் கொள்கைகளை எதிர்போர் Commity போட்டம் போட்டு ஒரு நிமிஸம் கூட ஆகல 6 Members

கம்சா துவா கஸ்ரோ ஜனா முருகா மிருசா அப்புறம் நான்.....கஸ்ரோக்கும் ஜனாக்கும் ளசை செம திட்டு அதோட moudoutஆகிட்டாங்க எதயோ பறிகூடுத்தவங்க போல பில்டப் மட்டும் பலமா கொடுத்தாங்க ஜனா Feel பன்னலாம் அதில ஒரு Reson  இருக்கு எபப்பவும் பேச்சு வாங்காதவன்.sir பேசினாலே அது  கஸ்ரோக்காக தான் இருக்கும் அவன் seen  இருக்கே அந்த நடுச் சாமத்தில  தனியா இருந்து Feel  பன்னுறாங்களாம். 7மணி பாத்தலே Clear  அ தெரியாது இதில போய் அந்த இருட்டுக்க மரத்துக்குக் கீழ இருந்தா.

இத பார்த்த துவாரகி தானும் Feel பன்னுறாங்களாம் எத்தின Seen  பாத்திட்டம் இத பாக்க மாட்டமா..¬

யாரோ ஒருத்தன் Journalist  என்டு proff பன்னிட்டான் நான் அவங்க Meetingக குழப்பிட்டனாம் அப்பிடி ஒன்டும் பெரிசா செய்யல அப்பப்ப Dout தான் கேட்டன் ரொம்ப lenth அ போய்டே இருந்திச்சா அது தான் அது பெரிய தப்பாம் அப்ப கூட கம்சா சொல்லிச்சு வேணாம் கவி பேசாம இரு என்டு அதுக்காக கம்சா நல்ல பொன்னு என்ன விட கொஞ்சம் தான் Better  என்ன அப்பப்ப Alert ட இருக்கும் துவா சொல்லத் தேவயில்ல ஒரு ஆர்வக்கோளாறு சொல்லுற எல்லாத்தயும்  கேக்கும் அத அப்பிடியே செய்யும் இதால நமக்குத் தானே சிக்கல்.

இரண்டு மணி Airport க்க பேனம் Bording pass 4.00am தூங்கி ஒரு நாள் ஆகப்போகுது 7.15 am Piloit  க்குள்ள போயாச்சு என்னுடைய முதலாவது விமானப்பயணம் 28 பேர்ல 25 பேருக்கு முதற்தடைவை 7.25யஅ க்கு சென்னையை நோக்கி புறப்பட்டது 10 நிமிடம் இருக்க ும் நம்ம Friends
Flight க்கள்ள சுத்திப்பாக்கிறாங்க அங்க அப்பிடி என்ன தான் சுத்தி பாக்கிற அளவுக்கு இருக்கோ(அவனவனுக்கு உயிர் போகுது இதுக்க picnic ஒரு கேடு)

 ஏதாச்சும் வெட்டி வேல நடந்தா Leder இல்லாமலா .பட்டாம்பூச்சி சிந்து  அதென்ன அடைமொழி . சொல்றன் யாராவது அழகா இருந்தா அவ மனசில பட்டாம்பூச்சி பறக்குமாம்
(கண்ணாடில தன் முகத்த மட்டும் பார்த்த பறக்காது))

8.28 க்கு சென்னையில் கால்பதித்தோம்..சென்னை பல்கலைக் நன்பர்கள் reseve  பன்ன வந்திருநந்தங்க. நாம 28 பேர் சேர்ந்து தானே வந்தம் பட்டாம்பூச்சி சிந்துவ Resev  பன்ன ளிஉயைடய ஒரு group அவங்க relation  MRTC  என்டு Bord  வேற.இத மட்டும் sir பாத்திருக்கனும் அடுத்த Flight ல சிந்து Srilankaக்கு வந்திருக்கும்.

சென்னை (சத்தம்) இது ரெண்டுக்குமே செம பொறுத்தம்.Jaffnaல வெய்யில் அதிகமாத்தான் இருக்கும் ஆனா சென்னை வெய்யில் தாங்க முடியாது

Airport வாசல் பரபரப்பான சூழல் வாகன இரைச்சல் இதற்க்கு மத்தியில் அன்பான வரவேற்ப்பு..சாந்தோம் church க்கு செல்ல வாகனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன

துட்டுக் கூடும்மா’சென்னையில் நான் கேட்ட முதலாவது மக்கள் குரல் ஆங்காங்கே பல பெண்கள்.தரிப்பிடங்களுக்கு வெளியே நிரம்பி வழியும் வாகனங்கள்.வெற்றிலை துப்பலால் நிலத்தினை அலங்கரிக்கும் சாரதிகள். குடமையை மறந்து நட்புடன் பேசிக்கொன்டிருக்கும் காவல்துறையினர்.பயணிகளை சலிர்க வைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளும் வாகனசாரதிகள். உறவினர்களுக்காக எதிர்பார்புடன் இருப்போரின் ஏக்கம். அத்தனையையும் தான்டி ஒலிக்கும் வாகன இரைச்சல்கள்.1 மணி நேரத்திற்க்குள் நான் கேட்ட ஆறு விதத்தியாசமான தமிழ் மொழிநடைகள்.சென்னை பல்கழைக்கழக மாணவர்களின் ஆங்கிலம் கலந்த தமிழ் ஒட்டோ சாரதியின் குப்பத்து தமிழ். பிச்சை எடுப்போரின் கெஞ்சலான தமிழ்.என பல மாவாட்டங்களின் தமிழினை முதல்நாளே கேட்டேன்.நான் சென்னையில் பார்த்து ரசித்த விடயத்தில் முதலாவதாக அவர்களின் தமிழ்.

17.10.2011 காலை 9.30க்கு அங்கிருந்து 1மணிநேர பயணத்தின் பின் சாந்தோம் உhரசஉh இனை அடைந்தோம்.பஸ்சுக்க என்ன நடந்தது என்றே தெரியாது அவ்வளவு தூக்கம் 11.00யஅ நாந்தோம் முண்றாவது மாடியில் 9 அறைகள் எமக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஏன் இதில நிக்கரிங்க மூன்றாவது மாடிக்கு போகட்டாம்.............(பாவிப் பயலுங்கலா படிவழியாதான் போகனுமா)சரி மேல வந்தாச்சு மறீன் ரெம்ப மேசங்க அப்ப கூட சலைக்காம தன்னோட duty ய செய்யிறாவம் கூடவே கொளசி ஐஸ்வரியா சொல்லவா வேனும் friend's ஒரே Room அ க்க போக வேண்டாம் நாம தான் பிரிச்சு விடுவம்.....டboy's sir கூட போய்டாங்க (தப்பிச்சிட்டாங்க)
ஐஐஐயோ ஆரம்பிச்சிட்டாங்க ஏய் நீ கதைக்க வேண்டாம் வேனும் என்டா room க்க கூட்டிட்டு போய் அடி தயவு செய்து இப்பிடி மட்டும் அறுகாத
(என்டு சொல்லனும் என்டு எனக்கு மட்டும் ஆசை இருக்காத எப்படா போட்டு குடுகலாம் என்டு பாத்திட்டு இருப்பாங்க..).))
நீங்க முன்று பேரும் 1000 சொன்னாலும் காதில வாங்கிறது இல்ல எண்டு முடிவெடுத்தாச்சு அப்புறம் என்ன .அவங்க duty ல அவங்க ஒழுங்கா தான் இருந்தாங்க..
சழழஅ பிரிச்சு விட்டாச்சு 10 நிமிசம் கூட இல்ல நான் கம்சா முருகா துவா தட்சா மிருசா கூடவே மறீன்
(தன்னயும் சேத்துக்க சொல்லி அழுதிச்சு)
நாம friend's இருக்கிற matter  sir க்கு தெரியாது..12க்கு கிழ இருக்கிற hallக்கு வரட்டாம் 
(எப்பிடி இருந்திச்சு தெரியுமா 3வது மாடில இருந்து தள்ளி விடனும் போல)
classலயே நம்மல ஒண்டா இருக்க விடமாட்டாங்க room ல இருந்தா சொல்லவா வேணும் பக்கத்து Room Father    (ரொம்ப நல்லவரங்க இல்லாட்டி உயிரோட விட்டிருக்க மாட்டார்)
lunch ready  எல்லாரயும் சத்தம் போடாம வரட்டாம் அதுக்கு முதல் meetin
முதல்ல சாப்பட்ட போடுங்கப்பா)
 madras university students பாக்க சுமாரா இருந்தாங்க எங்களோட பார்க்கும் போது ரொம்ப அழகு தான் பொதுவாவ சொன்னங்க)
டரnஉh கொன்டுவந்தாங்க நந்து ரசூல் யாதவ் அஸ்வின்...அப்பியே 10 பேர் இருக்கும் lunch முடிச்சு அப்பிடியே போய் துங்கிடலாம் என்டு தான் நினைச்சம் முடியுமா அப்புறம் ஒரு meeting

 sir:- அவங்க MA student's உங்களுக்கு Serve  பன்னனும் என்டு அவசியமில்ல படிப்புக்கு முதல்ல பழக்கவழக்கத்த பழகுங்க
(தெரியாம வாங்கி சாப்பிட்டோம் சாமி)

Sir நம்மள திட்டிரதில தப்பே இல்ல என்டு எங்களுக்கு புரியுது தான் என்ன செய்யிறது...நாம என்ன விளக்கம் குறைவா அத மெறீன் Repet பன்னுது....(அப்பிடியே அப்பினா எப்பிடி இருக்கும் )தோனிச்சு
Meeting போட்டாலே அதிகமா திட்டு வாங்கிறது சுகந்தி ரூபினி இப்பிடி ரெண்டு முன்ற பேர் சுகந்தி அக்கா விரதம் அதாலயே அப்பப்ப நல்லா வாங்கிக் கட்டுவாங்க

 Sir:- Healthy  இருந்தா தான் active அ இருக்க முடியும் இங்க வந்தது விளையாட இல்ல படிக்க கஸ்டம் என்டா வீட்டுக்குப் போகலாம் என்டு சுகந்திய பார்த்துத் தான் Sir சொன்னாரு

பக்கத்தில  யாரே அழுகிற சத்தம் கேட்டிச்சு வேற யாரு நம்ம கம்சா
 (இவளுக்கு என்ய்யா நடந்திச்சு ) கவி Sir என்ன தான் சொல்லியிருப்பார்
(என்டா அக்கா கம்சாவும் விரதம்) துவா மறீன் அவள சமாளிக்க ரொம்ப risk  எடுத்தாங்க.
மறு நாள் காலை 18.10.2012 சென்னை பல்கலைக்கழகத்திற்க்கு  செல்ல அனைவரும் தாயாரானோம்

பஸ்சில தான் போகனும் Sharp  8.00க்கு கீழ வரட்டாம் வராதவங்கள விட்டுட்டு பேயிடுவாங்களாம்.

கவி எழும்பு  7.30 ஆகிட்டு ½ மணித்தியாலம் தான் இருக்கு
(அப்பா ½ மணித்தியாலம் இருக்கு) 

கம்சா துவா மறீன் எல்லாம் 8.00 எண்டா 7.00க்கு Ready ஆகிடுவாங்க அதுகாக நாம அப்பிடி இருக்க முடியுமா என்ன போல தான் முருகா அத அவங்க Term எழுப்பப் பற்ற பாடு .
இருந்தாலும் Sharp 8.15க்கு Ready ஆகிட்டன்

பஸ்சிற்காக காத்திருந்த அந்த மணித்துளிகள் பாடசாலை மாணவர்களின் பரபரப்பு தெருவோர பிச்சைக்காரர்கள் .பஸ்தரிப்புக்கு அருகே குப்பை கூட்டிக் கொன்டிருக்கும் அந்த பென். என்றும் நினைவில்
 பொது இடங்களில் பேசவேன்டாமாம் சென்னை தமிழ் பேசிற என்டா சரி...srilankan என்டு தெரியபடுத்த வேன்டாமாம்

(அது சரி தான்....நாம என்ன வச்சிட்டா வஞ்சகம் பன்னுறம் இருந்தா வரும் தானேங்க)


சென்னை பல்கழைக்கழகம் பிரமாண்டமான கட்டிட அமைப்பு மேற்க்கு வானில் சூரியன் மறையும் போது செவ்வானம் காட்சியளிப்பது போல செங்கற்களினால் சென்னை பல்கழைக்கழகம் அதனுல்தான் அத்தனை அன்பான உறவுகளை சந்திப்பேன் என நான்அ நினைக்கவில்லை அதுக்குப்பிறகு வீட்டு ஞாபகம் வரவில்லை.




காலை உணவை முடித்துக்கொன்டு. வகுப்பரையில் நுழைந்தோம் முதலாவது செயற்திட்டம் சென்னை பல்கழைக்கழகத்தினை சுற்றியுள்ள சேரிக்கு சென்று Rural Reporting செய்ய வேன்டும்.அதற்காக பிரிக்கப்பட்ட குழுவினுள் தான் மகேஸ்வரியை சந்தித்தேன் .
சேரிப்பயணத்தின் முடிவில் எம் நட்புப் பயணம் ஆரம்பித்தது.


சென்னையின் மறுபக்கம் சேரி என சொல்லும் அளவுக்கு குப்பங்களும் சேரிகளும் நிறைந்துள்ளன.நிறைந்திருப்பது குப்பைகள் மடடுமல்ல சோகங்களும் கண்ணீரும் தான் நாம் சென்ற அயோத்திக்குப்பத்தில் பார்த்த நபர்கள் தான் எத்தனை பேர் .தன்னீர் குழாய் அருகே உடுப்புத் துவைத்துக் கொண்டு தன் சோக காவியத்தை பகிர்ந்து கொன்ட அன்னம்மாள்..
வண்டியில் வாழைப்பழங்களை விற்று வாழ்வினை நடாத்தும் 45 வயதுள்ள அப்பெண் .சினிமா கனவுடன் நடனக்குழுவில் இணைய தான் பட்ட கஸ்ரத்தினை வெளிக்காட்டாமல் வெளிப்படுத்தும் இளைஞன்....வீட்டுக்கு வெளியே இருந்து ஈரவிறகுடன் போராடிக் கொன்டிருக்கும் 38 வயதுடைய சிவக்கொழுந்து..கமராவை ஆவலாக தொட்டு பார்த்த சிறுவர்கள் தங்கள் புகைப்படத்தை கமராவில் பார்த்து வெட்கப்பட்டு அக்காவின் பாவாடைக்கு பின் ஒழிந்த அந்த முகம்..11.00 மதியம் குழுவாக சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்ற தந்தை வர்க்கம்..நடு வெயிவில் மீன்களை வைத்து கூவி கூவி விற்க்கும் தாய் வர்கம்..அரசாங்கம் குப்பத்தை விட்டு வெளியேறுமாறுமாறு கேட்டும் தங்கள் கருத்தை முன்வைக்க போராடும் ஒட்டுமொத்த குப்பத்து மக்கள்..அயோத்திக்குப்பமும் வாழ்வும் என்னை பாதித்த அந்த கனங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை....




தொடர்ந்து மெரீனா கடற்கரையில் ஒர் பயணம். மகேஸ் இன் செல்லமான திட்டல் அக்கரையான பார்வை குழந்தை தனமான செய்கை....இதெல்லாத்தயும் விட கதைச்சே வதைப்பாலே வடிவேல படத்தில பாத்திருப்பீங்க சினிமாவில பாத்திருப்பீங்க போஸ்டரில பாத்திருப்பீங்க ஏன் கட்சிக் கூட்டத்தில கூட பாத்திருக்கலாம் சென்னை பல்கழைக்கழகதில பாத்திருப்பிங்களா அது தான அவள்......அடுத்தது மொனிக்கா அக்கா ரொம்ப பிடிச்சவங்க என்டா எனக்கு திட்டவே மாட்டாங்க என்ன செய்தாலும் அன்பா செல்லுவாங்க.........

                                                                                                                                                       தொடரும்....

இப்போதைக்கு இதோட முடிச்சுக்கிறேன் என் பேனா மை முடிந்தாதாலும் type  பன்னி Bour அடிச்சதாலயும்...........(அங்கால என்ன பார்வ அது தான் Cut  பன்னி தொடரும் என்டு போடாச்சுல்ல)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls