Tuesday, March 27, 2012

நேற்றைய நிஜங்கள் இன்றைய எழுத்தில்....

ச்சே எவ்வளவு பயங்கரக் கனவு..

வயிற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட திகில் தூக்கத்தில் இருந்து என்னை தூக்கி வாரிப் போட்டது படுக்கையறையில் இருள் உறைந்திருந்தது மின் தடையால் மின் விசிறி நின்று போனதில் கழுத்தும் பிரடியும் வேர்த்து நசநசத்தன

வெளியே வந்து ஜன்னலின் கேட்டினை தொட்டுத் தடவி திறந்தேன் கையில் தூசி ஒட்டிக் கொண்ட மரமரத்தன மங்கிய நிலா வெளிச்சத்தில் தூரத்து மரங்கள் அமானுஷ்ய வடிவம் கொன்டு வெறியாட்டம் போடுவது போல் என் மனதுக்குப் பட்டது.

  பகல் நேரங்களில் மாபெரும் இசை செண்டுகளாக நிஷ்டையில் ஆழ்ந்த தவமுனிவர் கைதேர்ந்த சிற்பி வடித்த கலைப்படைப்புகளாக முகம் காட்டும் செடிகளையும் பதர்களையும் மரங்களையும் இரவு நேரம் பயந்தவர்களை மிரட்டும் மருட்டும் சாதனங்களாக மாற்றி மாஜாலம் செய்து  வைத்திருந்து. சூழ்ந்திருந்த தனிமை என் இருதயத்தை இரும்புக்கரங்களால் நெரித்தது.

வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றேன் பிறைநிலா மேகங்களுக்குள் மறைந்து கொள்ள முற்றம் இருளில் முழ்கிக் கிடந்தது. தொப் என்று சத்தம் கேட்டது. எனக்கு தூக்கி வாரிப் போட்டது மரத்துப் போய் அப்பிடியே நின்றேன் யாராவது சுவரோரிக் குததிக்கிறானோ என் சுவாசதத்தின் ஒசை பாம்பின் சீறலாக இதயத் துடிப்பு  உடுக்கையின் ஒலியாக எனக்கே கேட்டது.

முற்றத்து மின்விளக்கு பளிச்சென்று உயிர்பெற்றது சத்தம் வந்த திசையில் கீழே விழுந்திருக்கும் தென்னை மட்டை என்கன்களில் பட்டது என்னை எப்படிப்பயமுறுத்திவிட்டது இந்த யடப் பொருள்சின்னப் பொன்னாக நான் அக்காவுக்கு பக்கத்தில் படுத்து தூங்கும் வேளையில் என்னை பயந்து எழச்செய்யும் இத்தகைய கனவுகள் வரடத்துக்கு ஒரிரு முறைகள் வந்துண்டு நான் உடனே எழுந்து போய் தூக்கக்கலக்கத்துடன் கண்களை கசக்கியபடி அப்பாவின் ரோமம் அடர்ந்த மார்பின் மேல் என் தலையை சாய்த்துக் கொள்வேன் அப்பாவின் இருதயம் நிதானமாக அடித்துக்கொள்ளும் சத்தமும் ஏறி இறங்கும் நெஞ்சில் அமைதியாய் தூங்குவேன்..

அப்பாவின் அருகமை எல்லா பயங்களையும் விரட்டிடும்...

நாளைக்குக் காலையில் இந்தக் கனவும் இரவும் ஒரு பொருட்டு அல்ல இருந்தாலும் இந்த நெடி என்னை பயம் கௌவிக்கொள்கின்றன ….

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls