Friday, September 30, 2011

“விடிய எழும்பிப் பார்த்தேன் எங்க வீட்டு முத்தத்தில பாதி எரிஞ்சுபோன தலை கிடந்ததுங்கோ..உந்த வீட்டில தான் தான் கால் கிடந்தது பாவம் அவள் ஒரு இளம் பொம்பிள பயந்து போய் கத்திக் கொண்டு ஓடி வந்தது அப்ப நேரம் விடியக்கால 5.00 மணி இருக்கும்…..!







சொல்லி முடிப்பதற்க்குள் இதயமே ஒரு கணம் நின்று விடும் இருந்தது.
யாழ்பாணத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் அமைந்துள்ளது காக்கை தீவு J/133 கிராம சேவையாளர் பிரிவை கொண்டமைந்தது ஒர் மீனவக் கிராமம் மொத்தமாக 86 கிராமங்களைக் கொண்டுள்ளது.



இக் கிராமம் பற்றிய பல செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம் மேலும் அறிய ஆவலுடன் அக்கிராமத்திற்க்கு செல்ல 789 இலக்க போரூந்தில் ஆரம்பமானது எம் பயணம்.இப் பேரூந்து சுமார் 50மீற்றர் தொலைவில் வரும் போதே அனைவரும் முக்கினை பொற்றிக் கொள்கின்றனர்.



முகத்தினை சுழிக்கிறார்கள் வாய்குள் எதோ முனுமுனுக்கிறார்கள் வண்டியின் வேகம் அதிகரிக்கின்றது.யன்னல் கம்பிகளின் ஊடாக தலையை வெளியே நீட்டி சிலர் துப்புகின்றார்கள் காக்கை தீவு இது தான் இனம் காட்டுவதற்க்கு இப்படியொரு குறியீடா. மீன் சந்தைக்கு முன் பேரூந்து நின்றது காக்கை தீவு எங்கே என்று கேட்டோம்.
இது தாங்க காக்கைதீவு மீன் சந்த உதால நேர போன தெரியும் “ என்றார்கள் மீன் வாடை காற்றோடு கலந்து ஊரெங்கும் ஆக்கிரமித்திருந்தது. கமராவில் படங்கை பதித்தபடியே சென்றோம். சுpறிய சிறய ஓலைக் குடில்கள் பெரிய கல்வீடுகள் என கலந்திருந்தன சிறு தொலைவில் வறட்சியினால்  நிலம் வெடித்து இருந்தது அது ஒர் தாழ்வான பிரதேசம் வற்றி போய் கொண்டிருக்கும் குளம் சிறிதளவு நீர் இருந்தது அதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த நீர் ஊதா நிறமாக இருந்தது.


இதைபற்றி கேட்பதற்க்கு சங்க செயளார் கஜேந்திரனை சந்தித்தோம் அவர் கூறுகையில் “இந்த குளம் மழை வத்தி போகேக்க இப்டித்தான் இருக்கும் மாரி காலத்தில நாங்க இங்க இருக்கவே முடியாதுங்க பக்கத்தில எங்கயாவது பள்ளிகூடத்தில போய் தான் தங்கனும் ஒரு மாசத்துக்கு மேல தண்ணி வத்தாது பிறகு இந்த வீட்ட வருவம் இது தான் ஒவ்வரு வருஷமும் நடக்குது நாங்க இடம்பெயராம இருக்கனும் என்ட பள்ளமான இந்த குளத்த நிரப்பனும் அப்ப தான் இந்த தண்ணி கடலுக்கு போகும் இதுககுக ஒரே தீர்வு இது மட்டும் தான் “
இத பற்றி யாரிடமாவது கதைத்தீர்களா? யார் யாரிடம் கதைத்தீர்கள்?
கோரிக்க மட்டுமே எங்களாள முன்வைக்க முடியும் தீர்வு அவங்க கையில தான் இருக்கு சிறுகைத்தொழில் அமைச்சர்.டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமும் பொதுக்குழுக்களிடம் முன்வைத்தோம் கூட எல்லா மட்டங்களிலும் கதைத்து பாத்திட்டோம் அரசாங்கம் நினைச்சா ஒரு செக்கனில இத முடிக்கலாம் ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரி தெரியல
யசாக் நிறுவனம் 10 லட்சம் செலவில் 2008 ஆண்டு குளத்தின் ஒரு பகுதி கட்டை அமைத்தது தந்தது. சிறுவர் பாதுகாப்பு நிதியம் 50லட்சம் செலவில் 2004 ஆண்டு வாய்கால் கட்டி தந்தார்கள். ஆனாலும் மழை காலங்களில் வெள்ளத்தண்ணீர் வீடுகளுக்குச் போவதும் நாங்க இடம் பெயர்வதும் தொடந்து கொன்டே தான் இருக்குது. எங்களுக் இருக்கிற ஒரேயொரு வேண்டு கோள் பள்ளமான குளத்தை மேடக்க வேண்டும்.ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.என்ற எக்கத்துடன் கதைத்து முடித்தார்

வீதி அருகே தண்ணீர் பம்பியின் கீழ் கிட்டத்தட்ட முப்பது தண்ணீர் கலன்னள்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தது எதிரே மரத்தடியில் இருந்த முத்தமிழ் சனசமூக நிலைய தலைவர் அ.கஜேந்திரன் அவர்களை சந்தித்தோம் குடிநீர் பிரச்சனை பற்றிக் கேட்டோம்
“ரnனி குடிநீர் விநயோகம் செய்கின்றது ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தண்ணி வராது ஒரு குடும்பத்துக்கு 35லீற்றர் மட்டுமே பொதுக்கினருக்கு இடம் ஒதுக்கி இருக்கினம் பொதுக்கிணறு 7 இருக்கு நல்ல தண்ணி ஆனா கானது பிள்ள”என்றார்.
ஆவரிடம் விடைபெற்றுக் கொன்டு சென்றோம்
எங்க இருந்து வாரீங்க. பேப்பர் காரங்களே.எந்தப் போப்பர் எனக் கேட்டுக் கொன்டே அருகில் வந்தார் என்னை அறிமுகப்படுத்தினேன்
“நிழலுக்க வாங்கோ என்றார் இந்த இடத்தில வெள்ள தண்ணி குடி தண்ணிய விட பெரிய பிரச்சன இருக்கு இதுக்கு எத்தின வருஷமா தீர்வு கானரது என்டு எத்திதின பேர் வெளிக்கிட்டுட்டினம் ஒரு பிரியோசனமும் இல்ல என்டு கோபத்துடன் முனுமுனுத்தார். என்னத்த பற்றி சொல்கிறார் என்று ஆரம்பத்தில் புரியவில்லை நில்லுங்கோ என்டு சொல்லிக் கொன்டு என்னத் தான்டி தம்பி தம்பி என்று கூப்பிட்டுக் கொன்டே போனார் சிறிது நேரத்தில என்னொருவருடன் வந்தார் இவற்ற வீட்ட தான் நடந்தது “விடிய எழும்பிப் பார்த்தேன் எங்க வீட்டு முத்தத்தில பாதி எரிஞ்சுபோன தலை கிடந்ததுங்கோ..உந்த வீட்டில தான் தான் கால் கிடந்தது பாவம் அவள் ஒரு இளம் பொம்பிள பயந்து போய் கத்திக் கொண்டு ஓடி வந்தது அப்ப நேரம் விடியக்கால 5.00 மணி இருக்கும்…
அங்க பாருங்கோ ஒரு மதில் தெரியுதோ அது தாங்க சுடல என்றார்.
குடியிருப்புக்களுடன் சேர்நதே கானப்பட்டது சுமார் 50 மீற்றர் சுற்று வட்டத்தில் குடில்கள்; கானப்பட்டது. ஆங்ககாங்கே உடைந்த மதில்கள் பற்றைகள் என பார்க்கும் போது எதுவும் புலப்பட வில்லை இரண்டு தகரங்களை  தாங்கிக் கொன்டிருந்த உயரமான கம்பிக் கொட்டகை அங்கு சென்றோம்.
சுடலை குடியிருப்பிற்க்கு 2மஅ தூரத்திற்க்கு அப்பாலாவது அமைந்திருத்தல் அவசியம் .இருப்பினும் இக் கிராமத்தில் எது வித நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை .அக் கிராமத்தவர்கள் மேலும் தெரிவிக்கையில்.கலாநிதி மனோன்மனி சன்முகதாஸ் அவர்கள் தமது மகனின் உடலை அடக்கம் செய்ததன் காரணமாக தற்போது இச் சுடலையை புனர்நிர்மானம் செய்து கொன்டு இருக்கிறார்கள்.
தனி ஒர் மனிதன் காட்டும் அக்கறை அரசுக்கு இல்லை என்றே தான் கூற வேண்டும்.இக் கிராம மக்கள் ஒன்றினைந்து கொடுத்த மனு பல முறை கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என்று விசனம் தெரிவித்தனர். யுதார்த்ததையும் தான்டி ஒர் விடயத்தை யோசித்து பார்தால் சுடலைக்கு அன்மையில் இருப்பது சாதாரனமாக  உள்ள அனைவருக்கும் பயத்தை உண்டாக்கும் செயல் அதனை அவர்களே கூறினார்கள்.
ஓலிவாங்கியினை கையில் எடுத்ததுமே தேவையான விடயங்களை பேச மறந்து தமது பெருமைகளையும் அரசியல் விடயங்களையும் கதைப்பர்களே தவிர மக்களுக்கு தேவையான விடயங்களையோ மக்கள் சார்பாகவோ கதைப்பது இல்லை.சிங்கள அரசின் கைக்கூலிகளாக செயற்படுவதே பிரதான நோக்கமாக கொன்டுள்ளனர்.
இந்த நிலைக்கு வேறு எதுவும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை . அதற்கு பதில் இந்தப் பாரதியார் பாடல் பொருத்தமாக இருக்கும்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ   

Thursday, September 29, 2011

அரசின் அடுத்த நாடகமே மீள்குடியேற்றம்..

அரசின் அடுத்த நாடகமே மீள்குடியேற்றம்


நாவலடி மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வியல் அவலநிலை பற்றிய ஓர் நேரடி ரிப்போட் என் முதலாவது பயணம்


மீள்குடியேற்ற அமைசசர் விநாயகமூர்த்தி முரளிதரன்
 
rpW ifj;njhopy; mikr;rh; lf;s]; Njthde;jh



 

இந்த வகையில் யாழில் உள்ள அரியாலை கிழக்குப் பகுதியில் உள்ள நாவலடி பூம்புகார் மற்றும் கிழக் அரியாலை எனப்படும் மூண்று மீள்குடியேற்றக் கிராமங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன இவற்றுள் துஃ 90 ஐ  கிராம சேவையாளர் பிரிவாகக் கொண்ட மக்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் செவ்விகான சந்தர்பம் கிடைத்தபோது.

முதலில் நாம் அக் கிராமத்தின் வாயிலில் உள்ள ஓர் சிறிய கடையில் விசாரித்தோம் அவரின் உதவியுடன் அக் கிராமத்திற்குள் நுழைந்தோம் தகரத்தினால் வேயப்பட்ட  சிறிய சிறிய குடில்கள் மிகவும்  நெருக்கமாகவும். மழை ஓய்ந்தும் அங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ளங்கள். ஆரம்பம் எது? முடிவு எது? என குழம்பும் அளவிற்கு பாதைகள் என பார்தவுடனே மனதை வருடும் காட்சிகள் தொடர்ந்தன
தொடர்ந்து பல குடிசைகளை தான்டி இக்கிராமத்தின்  தலைவி சன்முகதாஸ் விக்னேஸ்வரியையே முதலில் சந்தித்தோம். அக்கிராமத்தைப் பற்றிய அனைத்து விடயங்களும் அவருக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது நாம் கேட்டதை விட மேலதிகமாகவே தகவல்களை பெற்றுக் கொன்டோம் 1995ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் சென்றவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இக் கிராமத்தில் 130 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன என்றும் ஆரம்பத்தில் பெரும்பாலான வீடுகளை இரானுவத்தினரே கட்டித்தந்தார்கள் என குறிப்பிட்டார்.

 

இம் மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான கரித்தாஸ் கீயூடேக் பல உதவிகளை வழங்கிய போதும் தமது அடிப்படைத் தேவைகள் ஒரு வருடமாகியும் நிறைவு செய்யப்படவில்லை எனவும் ஆரம்பத்தில் குடிநீர் வசதி மிகப்பெரும் பிரச்சனையாக இருந்தாகவும் தற்பொழுது கரிதாஸ் கீயூடேக் நிறுவனம் பாலடைந்த கிணறுகளை புணர்நிர்மானம் செய்ததனால் தற்போது பிரச்சனைகள் இல்லை எனவும் தெரிவித்தார்

 


இருப்பினும் மலசலகூட வசதி ,ன்மையினாலும் மின்சார வசதிகள் இன்மையாலும் பல இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார். மணியம்தோடடத்தில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களுக்கு மின்சாரம் வந்துவிட்டது எனவும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வருகின்ற மாதம் ,தற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என சிறுகைத்தொழில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கூறியதாக தெரிவித்தார்.

Monday, September 26, 2011

'LAKE HOUSE" இன் வரலாறு


டி.ஆர். விஜேவர்தன
 இலங்கையில் அநேக பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின் மூடப்பட்டுவிட்டன. ஆயினும் விஜேவர்தனவால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் முக்கியமாக டெயிலி நியூஸ் (Daily News), தினமின, சிலுமின, தினகரன், ஞாயிறு தினகரன், ஒப்சேவர்  போன்ற பத்திரிகைகள் இன்று ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயரும், புகழும் பெற்று ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் விஜேவர்தன மேற்கொண்ட உன்னதமான நேர்மையான கொள்கையே ஆகும். இன, மத பேதங்களைக் கடந்து எல்லா மக்களும் இந்நாட்டவரே என்ற குறிக்கோளுடன் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய பத்திரிகைகளை ஆரம்பித்து மக்கள் பயனடையும் முறையிலே அவர்களின் விருப்புகளை நன்கு ஆராய்ந்து, செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. ஆங்கிலேயர் 1796ம் ஆண்டு இலங்கைக்கு வருமுன் தமிழிலோ, ஆங்கிலத்திலோ பத்திரிகைகள் இருந்ததாகத் தெரியவில்லை. 1862ம் ஆண்டு “விரிவீழிலினி பிஞிரிரிணிதினி” என்ற ஆங்கில பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின் மூடப்பட்டுவிட்டது. 1863ம் ஆண்டு விரிவீழிலினி ஜிதிஹிஞியிலிஹி என்ற வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1876ம் ஆண்டளவில் “விதிஹிசிலிழியிவி மிஸிதிஞிளியிதினி” ‘சியினிளிஸி லிஞிமிதினி’ என்ற ஆங்கிலப் பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பட்டன. ணிலிஞினியினிமி ஷிஹிதிஞி என்ற பத்திரிகை ஆங்கிலத்திலும், தமிழிலும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கியது. இது மட்டுமன்றி மட்டக்களப்பில் ‘ஹிசிரி ழிதிணிஜி’ என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்தவ மக்களிடத்தே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்கியது. மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்காக ‘ணிஸிஷிழியிணி பிஞியிரினிளி’ என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு முஸ்லிம் மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கியது. இப்பத்திரிகை தமிழிலேயே பிரசுரிக்கப்பட்டது.

சிலுவைப் போர்

சிலுவைக் குறியை ஆடையில் தரித்துக்கொண்டு புனிதபோர் நடத்ததிய கிறிஸ்வர்கள் “CRUSADERS’ என்று அழைக்கப்பட்டனர் “CRUSADE’ என்ற ஆங்கில வார்தை பிறந்ததும் அப்போது  தான்.


CRUSADERS
மகாபாராதக் கதை இந்திய மக்களிடையே பிரபலமாக இருந்த காலம் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஜெருசலேம் நகரில் பல புதிய மதங்கள் வேர்விட  ஆரம்பித்தன இயேசு அவதரித்தார் அப்போது மத்திய தரைக்கடல் நாடுகளில் பெரும் பகுதி ரோமானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது “மன்னர் தான் கடவுள் -கடவுள் தான் மன்னர் என்ற கருத்தை மக்கள் மீது அரசு தீவிரத்தோடு திணித்திருந்த காலம் இயேசு வளர வளர கிறிஸ்தவ மதமும் வளர ஆரம்பித்தது அவரை தேவதூதன் தேவ குமாரன் என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர் இவரை வளர விடுவது தங்களுக்கு ஆபத்து என்று ரோமானிய அரசு அஞ்சியது அதனால் அரசக்கு எதிராக புரட்சியைத் தூண்டுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிலுவையில் அறையப்பட்டார்.அப்போது இயேசுவுக்கு வயது 33.
சிங்கங்களுக்கு இரையானார்கள்
தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்ற பால் பீட்டர் என்ற இயேசுவின் இரண்டு சீடர்களும் கொடுரமாக கொல்லப்பட்டார்கள் .கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்ற பல பாதிரியார்களை ஆட்சியாளர்கள் கொலோஸியம் என்ற பிரமான்டமான திறந்த வெளி மைதானத்தில் சிங்கங்களுக்கு உணவாகத் தள்ளினார்கள்.
சிலுவைப்போர்
பதினோராம் நூற்றாண்டு அப்போது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஜெருசலேம் கைமாறியிருந்தது தங்கள் புனித நகரை மீட்க அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் அர்பன் “போர் முரசு” கொட்டினார் சிலுவைக்குறியை ஆடையில் தரித்துக் கொண்டு ஜெருசலேம் நோக்கி ஐரோப்பிய மக்கள் படையெடுத்துச் சென்றார்கள் புனித நகரமாக மாறியது
அடுத்து வந்த நூறு ஆண்டுகள் அது போன்ற ஐந்து புனித போர்களைச் சந்தித்தன கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆளுமையின் கீழ் ஜெருசலேம் மாறி மாறி வந்தது
சிலுவைப் போரில் பல  ஆயிரம் பேர் உயிர்விட்டார்கள்!
பணம் கொடுத்தால் பாவமன்னிப்பு!சுமார் 1517ம் ஆண்டு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பலரும் பொறாமையில் பொசுங்கும் அளவிற்க்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் செல்வமும் அதிகாரமும் குவிந்தன
இதே நேரம் ஜெர்மனியில் டெட்சூல் என்ற ஒரு பாதிரியார் “பணம் கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்கும்” என்று சொல்லி நாடெங்கும் பாமரர்களிடம் ஏராளமாக பணம் பறிக்க ஆரம்பித்தார்
இதை எதிர்த்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்டின் லூதர் என்ற இன்னொரு பாதிரியார் கோபமாக குரல் எழுப்பினார் கத்தோலிக்கத் தேவாலயங்களில பல சம்பிரதாயங்களையும் இவர் கடுமையாக எதிர்த்தார் கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது .இவர் கத்தோலிக்க
வழிபாட்டு முறையை protest செய்ததால் இவரைப்பின்பற்றியவர்கள் Protestants என்று அழைக்கப்பட்டார்
மார்டின் லூதரை அடுத்து ஜான்கேல்வின் என்பவர் வேறு மாதிரியான சீர்திருத்தங்களைச் சொன்னார் கிறிஸ்தவ மதம் மேலும் உடைந்தது கேல்வினிஸிம் அல்லது ப்யூரிட்டானிஸம் (Puritanism) என்று இன்னொரு புதிய மதம் பிறந்தது.
மன்னரின் மதமே மக்களின் மதம்
இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி தனது மனைவியை விவாகரத்து செய்ய அனுமதி மறுத்துவிட்டது அதனால் கோபம் கொண்ட மன்னன் தனது நாட்டில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயங்களுக்குத் தன்னையே தலைவராக நியமித்துக் கொன்டார் முன்னர் சொல்லும் மதத்தைத்த்தான் குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சட்டம் கூட இயற்றினார்.
முன்னரின் மறைவுக்குப் பிறகு இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூட்டிக் கொண்டவர் மேரி .இவர் கத்தோலிக்க தேவாலயத்தின் பக்கம் மீண்டும்
சாய நீங்கள் எல்லாம் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?என்று கேட்டு மக்கள் கொதித்தெழுந்தனர் மேரி எதிர்பாளர்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தார் “Bloody Mary”  என்று சரித்திரம் குறிப்பிடும் அளவுக்கு அவர் ஆட்சியில் படுகொலைகள் நடந்தன
ஆதன் பின் வியாபாரத்துக்காக வர்தகர்களும் நாடு பிடிக்க
ஜரோப்பியர்களும் ஆசியா அமெரிக்க ஆபிரிக்கா என்று கப்பல் ஏற அவர்களோடு கத்தோலிக்க மற்றும் ப்ராட்டஸ்டண்ட் மத போதகர்களும் சென்றார்கள்  கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் பரவியது இப்பொழுது உலகம் முழுவதும் 126 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls