Friday, May 18, 2012

காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்

ஊடகங்களே சமூக அமைப்புக்களே;
உங்கள் ஒற்றுமைதான் தாயக தமிழனை வாழவைக்கும். தமிழர்தாயகமான எங்கள் மண்ணில் வேற்றுநாட்டவன் வந்து எங்கள் பெண்களை மானபங்கப்படுத்தினான். எம்மால் தடுக்கமுடிந்ததா? இல்லை. எல்லாம் முடிந்துபோய் இன்று எங்கள் பெண்களை சீரழித்த காட்சிகளை பார்க்கிறோம். காட்சிப்பொருளாக்கிவிட்டான் சிங்களன்.
தான் செய்த கொடுமைகளை காட்சியாக்கி வைத்துள்ளான் அவன். எங்களுக்கான நீதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் இதுதானே எமக்கெல்லாம் வேண்டும்.
ஊடகங்களில் போர்க்குற்றக்காட்சிகள் குற்றத்துக்கான சாட்சிகளாய் வெளியிடப்படுகின்றன. நடந்தவைகள் தான் சாட்சியங்கள். அவற்றையே பொய்யாக்கத்துடிக்கும் இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு உலகநாட்டின் மனச்சாட்சியை உருக்கக்கூடிய சாட்சிகள் தான் இந்த காட்சிகள். வேதனையின் விளிம்பில் நின்று தான் இந்தக்காட்சிகளை பார்க்கிறோம். எங்கள் உறவுகள் இப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டார்களா? என்றெண்ணும் போதெல்லாம் இதயம் வெடிக்கிறது.
எங்களுடன் ஒன்றாய் இருந்து ஒட்டியுறவாடிய உறவுகள் இத்தனை கேவலமாய் துடிக்கதுடிக்க சீரழிக்கப்பட்டு கிடப்பதை எப்படி பார்த்து சகிக்கமுடியும். உலகம் இதற்கு நீதிவழங்கவேண்டும் என்று நாம் உரக்க குரல்கொடுக்க வேண்டும். இதைவிடுத்து சாட்சிகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களை தாக்குவது எந்தவிதத்திலும் நியாயமாகமாட்டாது.
நடந்தவைகள் அனைத்தும் உண்மை நிகழ்வுகள்.அப்படி இருக்கும் போதுஎப்படி அவற்றை ஊடகங்கள் மூடி மறைக்கமுடியும்.எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ?
ஊடகங்களே ஒற்றுமை தான் எங்கள் பலம். போர்முடிவடைந்து மூன்றாண்டுகளாகின்றன. பெண்களின் மீதான வன்முறைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. இன்று எத்தனை பெண்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு விட்டது. இவற்றையெல்லாம் தடுக்க முடிந்ததா? நெடுந்தீவிலே எதுவும் அறியாத அந்த சிறுமியை சீரழித்து கல்லால் முகத்தை சிதைத்த அந்த காமுகனை என்ன செய்யமுடிந்தது உங்களால்.? வாய்வீரம் பேசமுடியாது. செயலில் காட்டவேண்டும். இன்று தமிழர்தாயகத்தில் பெண்கள் நடமாடமுடியாத அவலநிலை.

இதை உங்களால் தடுக்கமுடியுமா? பெண்களின் கர்ப்பை சூறையாட நினைக்கும் காமுகன் பணம் பதவி பார்ப்பதில்லை. அவன் வெறி வேறுவிதம். எங்கள் பெண்களுக்கு இத்தனை கொடுமைகளும் நடந்தபின்பும் நாம் இன்னும் ஒற்றுமை கொள்ளவில்லை என்றால் அர்த்தம் என்ன? எங்களுக்கும் எதிரிக்கும் வித்தியாசம் இல்லையே. ஊடகங்களே ஒற்றுமையே பலம். அதை இழந்துதானே இன்று இத்தனை அவலங்களும் நடந்தேறின. இன்னும் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் இனியும் தமிழன் அழிவான் என்பது உறுதி. ஆகவே ஊடகங்களே தமிழனுக்கு விடிவு ஒற்றுமையில் தான் உள்ளது.
வெளியாகியுள்ள போர்குற்ற ஒளிப்படங்களை வெளியிடுவதன் மூலமே உலக மனச்சாட்சியை தட்டிக்கேட்கலாம். வெண்ணைதிரண்டு வரும்போது தாளியை உடைக்கத்துடிக்கும் ஊடகங்களே உங்கள் மனச்சாட்சியையும் ஒருதரம் கேட்டுப்பாருங்கள். நியாயத்தின் வழி நின்று ஊடகதர்மத்தை காத்துநில்லுங்கள். காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்.
எமக்கான விடியலுக்காய் ஒற்றுமையாய் உழைத்திடுங்கள்.

Tuesday, March 27, 2012

நேற்றைய நிஜங்கள் இன்றைய எழுத்தில்....

ச்சே எவ்வளவு பயங்கரக் கனவு..

வயிற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட திகில் தூக்கத்தில் இருந்து என்னை தூக்கி வாரிப் போட்டது படுக்கையறையில் இருள் உறைந்திருந்தது மின் தடையால் மின் விசிறி நின்று போனதில் கழுத்தும் பிரடியும் வேர்த்து நசநசத்தன

வெளியே வந்து ஜன்னலின் கேட்டினை தொட்டுத் தடவி திறந்தேன் கையில் தூசி ஒட்டிக் கொண்ட மரமரத்தன மங்கிய நிலா வெளிச்சத்தில் தூரத்து மரங்கள் அமானுஷ்ய வடிவம் கொன்டு வெறியாட்டம் போடுவது போல் என் மனதுக்குப் பட்டது.

  பகல் நேரங்களில் மாபெரும் இசை செண்டுகளாக நிஷ்டையில் ஆழ்ந்த தவமுனிவர் கைதேர்ந்த சிற்பி வடித்த கலைப்படைப்புகளாக முகம் காட்டும் செடிகளையும் பதர்களையும் மரங்களையும் இரவு நேரம் பயந்தவர்களை மிரட்டும் மருட்டும் சாதனங்களாக மாற்றி மாஜாலம் செய்து  வைத்திருந்து. சூழ்ந்திருந்த தனிமை என் இருதயத்தை இரும்புக்கரங்களால் நெரித்தது.

வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றேன் பிறைநிலா மேகங்களுக்குள் மறைந்து கொள்ள முற்றம் இருளில் முழ்கிக் கிடந்தது. தொப் என்று சத்தம் கேட்டது. எனக்கு தூக்கி வாரிப் போட்டது மரத்துப் போய் அப்பிடியே நின்றேன் யாராவது சுவரோரிக் குததிக்கிறானோ என் சுவாசதத்தின் ஒசை பாம்பின் சீறலாக இதயத் துடிப்பு  உடுக்கையின் ஒலியாக எனக்கே கேட்டது.

முற்றத்து மின்விளக்கு பளிச்சென்று உயிர்பெற்றது சத்தம் வந்த திசையில் கீழே விழுந்திருக்கும் தென்னை மட்டை என்கன்களில் பட்டது என்னை எப்படிப்பயமுறுத்திவிட்டது இந்த யடப் பொருள்சின்னப் பொன்னாக நான் அக்காவுக்கு பக்கத்தில் படுத்து தூங்கும் வேளையில் என்னை பயந்து எழச்செய்யும் இத்தகைய கனவுகள் வரடத்துக்கு ஒரிரு முறைகள் வந்துண்டு நான் உடனே எழுந்து போய் தூக்கக்கலக்கத்துடன் கண்களை கசக்கியபடி அப்பாவின் ரோமம் அடர்ந்த மார்பின் மேல் என் தலையை சாய்த்துக் கொள்வேன் அப்பாவின் இருதயம் நிதானமாக அடித்துக்கொள்ளும் சத்தமும் ஏறி இறங்கும் நெஞ்சில் அமைதியாய் தூங்குவேன்..

அப்பாவின் அருகமை எல்லா பயங்களையும் விரட்டிடும்...

நாளைக்குக் காலையில் இந்தக் கனவும் இரவும் ஒரு பொருட்டு அல்ல இருந்தாலும் இந்த நெடி என்னை பயம் கௌவிக்கொள்கின்றன ….

Wednesday, February 15, 2012

மூர்த்தி

வெயிலில் உலர்ந்து வாடிய உடலும்
துவைக்காத உடையும்
மழிக்காத தாடியும்
வாராத தலையுமாக

மூர்த்தி என்ற இளைஞன்
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டான்
கண்களில் மட்டுமல்ல நகத்து நுணி வரை துயரம் பொங்கி வழிகிற தோற்றம்எதிராளியைக் கூட வலுவாகத் தாக்கும் சோகம்..
12/02/2012
9.25am

Wednesday, February 1, 2012

இந்தியாவில் நாம்-கலாட்டாக்காலம்

இந்த பயணத்தை எழுத இரவில் வெளியே பார்த்திருந்தேன் இருளில் ஒன்றும் தெரியாததினால் தான் எனக்கு எண்ணம் ஏதுவும் வரவில்லை அதானால் தான்; வார்த்தைகள் ஏதும் வழிக்கோலவில்லை அத்தனை அழகான காலங்கள் அந்த இனிமையான நினைவுகள் வாசனையோடு என்றும் நினைவிருக்கும்.


நாம் தாண்டி வந்த நாட்களின் கீறல்கள் எம் மனதில் அடியாளத்தில் கோடு போல் பதிந்துவிட்டன நாம் அவர்களுடன் இருந்த அந்த 15 நாட்களும் கனப்பொழுதில் மறைந்து போகாது மனங்களிளே பல மாற்றத்தை ஏற்படுத்தி பயணத்தில் புது வசந்தத்தினை நுகர்ந்து கொண்டோம்
பல எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாய் ஒக்டோபர் 16ம் திகதி MRTC யில் ஒன்று கூடினோம் 9.20am  பஸ் கொழும்பை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை விட்டு எத்தனையோ தடைவை வெளியேறியுள்ளேன் ஏதோ இப் பயணம் தனிமைப்படுத்துகின்றது என்பதை நன்பர்களுடன் இருந்தும் உணர்ந்து கொன்டேன் நேரம் செல்லச்செல்ல பஸ்சுக்குள் சத்தம் தெருவைப் பிளந்தது சுமார் 11 மணி நேரம் எவ்வாறு கழிந்தது என்றே தெரியாமல் தலைநகரை இரவு12.45க்கு சென்றடைந்தோம்.


விமான நிலையத்திற்க்கு வெளியே வாகனத்தரிப்பிடத்தில் 2மணி நேரம் காத்திருந்தோம்.

காற்றின் மென்மையான வருடல்.அங்குள்ள தெருவிளக்கைத்தாண்டி தன்னை இனம் காட்டும் சந்திரனின் பொன்னான ஒளி. ஜில் என சிலிர்க்க வைக்கின்ற பணியின் அட்டகாசம்.அடுத்தடுத்து வானில் பறக்கும் விமானங்களின் இரைச்சல்கள். இதமான அந்த நடு இரவில் மரத்திடியில் உள்ள கதிரையில்..ஈர விழிகளுடன் பல நட்புகள் என் அருகே....தொலைபேசி அழைப்பின்னூடாக தகவலை பரிமாரிக்கொள்கின்றனர் வீட்டாருடன்


புரியுது உங்க MIND VOICE இவ்வளவு நேரமும் ரொம்ப வதச்சிட்டனோ? (என்ன கேள்வி அது தானே உன்மை)OK OK எனி நாம STORY வந்திடலாம்.

எல்லாருமே செம TIRED   ஒரு நாள் கொழும்பில் தங்கிட்டு அடுத்தநாள் இந்தியாக்கு போவம் எண்டு நம்பி தானே போனம் கண்ண முளிச்சுப் பார்த்த AIRPORT அப்பிடியே Shork அகிட்டோம் எக்கனமே கன்னக்கட்டுது இதுக்க Meeting  வேற.(சாவடிகிறாங்களேய்யா)

இந்த meeting கே over  அதில  mints   ஐ note பன்னுறதுக்கு ஒரு group  வேற.

இந்தியாக்கு போய் வரும் வரையும் girl's க்கு முன்று பேர பொறுப்பா விட்டாங்க.. விட்ட அந்த மூன்று பேரும் யார் தெரியுமா ஆப்பு NO 1 மறீன்...அப்டியே ஜஸ்வரியா கௌசி...நாம விடுவமா மறீன வச்சு மொக்க போட்டம். அதெப்பிடி மறீன் எங்களுக்கு பொறுப்பு தன்னையே பாத்துக்க கானல..

இத விட கொடும 10 Condisition வேற சின்னப்புள்ளதனமா தான் இருக்கும் Follow பன்னுறது தாங்க ரொம்ப கஸ்டம்.

condisition  NO 01:- எத பேசினாலும் அந்த முண்று பேரிட்டயும் கேட்டுட்டுத்தான் பேசனும்

Madras university  இருந்தோ இல்ல classல   இருந்தோ எழும்பி வெளிய யாராவது போனால் 2 பேர் கூடவே போகனும்

(எங்க போனாலுமா)

Friends  ஒன்றா ஒரே room  ல இருக்கக்கூடாது
Dairy  dialy  எழுதி  Sir  கிட்ட  Singnature  வாங்கனும்
(என்னும் இருக்கன்னு Feelings )

மறீன் Girlsக்கு பொறுப்பாம் அவ என்ன சொன்னாலும் கேக்கனும்

(தூக்கில தொங்க சொல்லியிருக்கலாம் இத விட)

இப்பிடியே List நீண்டு கொன்டே போகுது

அந்த முண்று பேரும் அதுதாங்க மறீன் ,ஜஸ் கௌசி ....கொசு கூட குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கிற Time 1 மணி பனியோ எங்கள பதம் பாக்குது இந்த மூண்று பேரோட விரிவுரை
 ‘நீங்கள் இந்தியாவில எப்படி இருக்கனும்’

((தெரியாம தான் கேக்கிறன் இது எங்களுக்கு தெரியாத இல்ல இவங்க சொன்னா மட்டும் அப்பிடியே கேட்டுடுவமாக்கும்)

Classலயே சும்மா இருக்க மாட்டம் விட்டமா இவர்களின் கொள்கைகளை எதிர்போர் Commity போட்டம் போட்டு ஒரு நிமிஸம் கூட ஆகல 6 Members

கம்சா துவா கஸ்ரோ ஜனா முருகா மிருசா அப்புறம் நான்.....கஸ்ரோக்கும் ஜனாக்கும் ளசை செம திட்டு அதோட moudoutஆகிட்டாங்க எதயோ பறிகூடுத்தவங்க போல பில்டப் மட்டும் பலமா கொடுத்தாங்க ஜனா Feel பன்னலாம் அதில ஒரு Reson  இருக்கு எபப்பவும் பேச்சு வாங்காதவன்.sir பேசினாலே அது  கஸ்ரோக்காக தான் இருக்கும் அவன் seen  இருக்கே அந்த நடுச் சாமத்தில  தனியா இருந்து Feel  பன்னுறாங்களாம். 7மணி பாத்தலே Clear  அ தெரியாது இதில போய் அந்த இருட்டுக்க மரத்துக்குக் கீழ இருந்தா.

இத பார்த்த துவாரகி தானும் Feel பன்னுறாங்களாம் எத்தின Seen  பாத்திட்டம் இத பாக்க மாட்டமா..¬

யாரோ ஒருத்தன் Journalist  என்டு proff பன்னிட்டான் நான் அவங்க Meetingக குழப்பிட்டனாம் அப்பிடி ஒன்டும் பெரிசா செய்யல அப்பப்ப Dout தான் கேட்டன் ரொம்ப lenth அ போய்டே இருந்திச்சா அது தான் அது பெரிய தப்பாம் அப்ப கூட கம்சா சொல்லிச்சு வேணாம் கவி பேசாம இரு என்டு அதுக்காக கம்சா நல்ல பொன்னு என்ன விட கொஞ்சம் தான் Better  என்ன அப்பப்ப Alert ட இருக்கும் துவா சொல்லத் தேவயில்ல ஒரு ஆர்வக்கோளாறு சொல்லுற எல்லாத்தயும்  கேக்கும் அத அப்பிடியே செய்யும் இதால நமக்குத் தானே சிக்கல்.

இரண்டு மணி Airport க்க பேனம் Bording pass 4.00am தூங்கி ஒரு நாள் ஆகப்போகுது 7.15 am Piloit  க்குள்ள போயாச்சு என்னுடைய முதலாவது விமானப்பயணம் 28 பேர்ல 25 பேருக்கு முதற்தடைவை 7.25யஅ க்கு சென்னையை நோக்கி புறப்பட்டது 10 நிமிடம் இருக்க ும் நம்ம Friends
Flight க்கள்ள சுத்திப்பாக்கிறாங்க அங்க அப்பிடி என்ன தான் சுத்தி பாக்கிற அளவுக்கு இருக்கோ(அவனவனுக்கு உயிர் போகுது இதுக்க picnic ஒரு கேடு)

 ஏதாச்சும் வெட்டி வேல நடந்தா Leder இல்லாமலா .பட்டாம்பூச்சி சிந்து  அதென்ன அடைமொழி . சொல்றன் யாராவது அழகா இருந்தா அவ மனசில பட்டாம்பூச்சி பறக்குமாம்
(கண்ணாடில தன் முகத்த மட்டும் பார்த்த பறக்காது))

8.28 க்கு சென்னையில் கால்பதித்தோம்..சென்னை பல்கலைக் நன்பர்கள் reseve  பன்ன வந்திருநந்தங்க. நாம 28 பேர் சேர்ந்து தானே வந்தம் பட்டாம்பூச்சி சிந்துவ Resev  பன்ன ளிஉயைடய ஒரு group அவங்க relation  MRTC  என்டு Bord  வேற.இத மட்டும் sir பாத்திருக்கனும் அடுத்த Flight ல சிந்து Srilankaக்கு வந்திருக்கும்.

சென்னை (சத்தம்) இது ரெண்டுக்குமே செம பொறுத்தம்.Jaffnaல வெய்யில் அதிகமாத்தான் இருக்கும் ஆனா சென்னை வெய்யில் தாங்க முடியாது

Airport வாசல் பரபரப்பான சூழல் வாகன இரைச்சல் இதற்க்கு மத்தியில் அன்பான வரவேற்ப்பு..சாந்தோம் church க்கு செல்ல வாகனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன

துட்டுக் கூடும்மா’சென்னையில் நான் கேட்ட முதலாவது மக்கள் குரல் ஆங்காங்கே பல பெண்கள்.தரிப்பிடங்களுக்கு வெளியே நிரம்பி வழியும் வாகனங்கள்.வெற்றிலை துப்பலால் நிலத்தினை அலங்கரிக்கும் சாரதிகள். குடமையை மறந்து நட்புடன் பேசிக்கொன்டிருக்கும் காவல்துறையினர்.பயணிகளை சலிர்க வைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளும் வாகனசாரதிகள். உறவினர்களுக்காக எதிர்பார்புடன் இருப்போரின் ஏக்கம். அத்தனையையும் தான்டி ஒலிக்கும் வாகன இரைச்சல்கள்.1 மணி நேரத்திற்க்குள் நான் கேட்ட ஆறு விதத்தியாசமான தமிழ் மொழிநடைகள்.சென்னை பல்கழைக்கழக மாணவர்களின் ஆங்கிலம் கலந்த தமிழ் ஒட்டோ சாரதியின் குப்பத்து தமிழ். பிச்சை எடுப்போரின் கெஞ்சலான தமிழ்.என பல மாவாட்டங்களின் தமிழினை முதல்நாளே கேட்டேன்.நான் சென்னையில் பார்த்து ரசித்த விடயத்தில் முதலாவதாக அவர்களின் தமிழ்.

17.10.2011 காலை 9.30க்கு அங்கிருந்து 1மணிநேர பயணத்தின் பின் சாந்தோம் உhரசஉh இனை அடைந்தோம்.பஸ்சுக்க என்ன நடந்தது என்றே தெரியாது அவ்வளவு தூக்கம் 11.00யஅ நாந்தோம் முண்றாவது மாடியில் 9 அறைகள் எமக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஏன் இதில நிக்கரிங்க மூன்றாவது மாடிக்கு போகட்டாம்.............(பாவிப் பயலுங்கலா படிவழியாதான் போகனுமா)சரி மேல வந்தாச்சு மறீன் ரெம்ப மேசங்க அப்ப கூட சலைக்காம தன்னோட duty ய செய்யிறாவம் கூடவே கொளசி ஐஸ்வரியா சொல்லவா வேனும் friend's ஒரே Room அ க்க போக வேண்டாம் நாம தான் பிரிச்சு விடுவம்.....டboy's sir கூட போய்டாங்க (தப்பிச்சிட்டாங்க)
ஐஐஐயோ ஆரம்பிச்சிட்டாங்க ஏய் நீ கதைக்க வேண்டாம் வேனும் என்டா room க்க கூட்டிட்டு போய் அடி தயவு செய்து இப்பிடி மட்டும் அறுகாத
(என்டு சொல்லனும் என்டு எனக்கு மட்டும் ஆசை இருக்காத எப்படா போட்டு குடுகலாம் என்டு பாத்திட்டு இருப்பாங்க..).))
நீங்க முன்று பேரும் 1000 சொன்னாலும் காதில வாங்கிறது இல்ல எண்டு முடிவெடுத்தாச்சு அப்புறம் என்ன .அவங்க duty ல அவங்க ஒழுங்கா தான் இருந்தாங்க..
சழழஅ பிரிச்சு விட்டாச்சு 10 நிமிசம் கூட இல்ல நான் கம்சா முருகா துவா தட்சா மிருசா கூடவே மறீன்
(தன்னயும் சேத்துக்க சொல்லி அழுதிச்சு)
நாம friend's இருக்கிற matter  sir க்கு தெரியாது..12க்கு கிழ இருக்கிற hallக்கு வரட்டாம் 
(எப்பிடி இருந்திச்சு தெரியுமா 3வது மாடில இருந்து தள்ளி விடனும் போல)
classலயே நம்மல ஒண்டா இருக்க விடமாட்டாங்க room ல இருந்தா சொல்லவா வேணும் பக்கத்து Room Father    (ரொம்ப நல்லவரங்க இல்லாட்டி உயிரோட விட்டிருக்க மாட்டார்)
lunch ready  எல்லாரயும் சத்தம் போடாம வரட்டாம் அதுக்கு முதல் meetin
முதல்ல சாப்பட்ட போடுங்கப்பா)
 madras university students பாக்க சுமாரா இருந்தாங்க எங்களோட பார்க்கும் போது ரொம்ப அழகு தான் பொதுவாவ சொன்னங்க)
டரnஉh கொன்டுவந்தாங்க நந்து ரசூல் யாதவ் அஸ்வின்...அப்பியே 10 பேர் இருக்கும் lunch முடிச்சு அப்பிடியே போய் துங்கிடலாம் என்டு தான் நினைச்சம் முடியுமா அப்புறம் ஒரு meeting

 sir:- அவங்க MA student's உங்களுக்கு Serve  பன்னனும் என்டு அவசியமில்ல படிப்புக்கு முதல்ல பழக்கவழக்கத்த பழகுங்க
(தெரியாம வாங்கி சாப்பிட்டோம் சாமி)

Sir நம்மள திட்டிரதில தப்பே இல்ல என்டு எங்களுக்கு புரியுது தான் என்ன செய்யிறது...நாம என்ன விளக்கம் குறைவா அத மெறீன் Repet பன்னுது....(அப்பிடியே அப்பினா எப்பிடி இருக்கும் )தோனிச்சு
Meeting போட்டாலே அதிகமா திட்டு வாங்கிறது சுகந்தி ரூபினி இப்பிடி ரெண்டு முன்ற பேர் சுகந்தி அக்கா விரதம் அதாலயே அப்பப்ப நல்லா வாங்கிக் கட்டுவாங்க

 Sir:- Healthy  இருந்தா தான் active அ இருக்க முடியும் இங்க வந்தது விளையாட இல்ல படிக்க கஸ்டம் என்டா வீட்டுக்குப் போகலாம் என்டு சுகந்திய பார்த்துத் தான் Sir சொன்னாரு

பக்கத்தில  யாரே அழுகிற சத்தம் கேட்டிச்சு வேற யாரு நம்ம கம்சா
 (இவளுக்கு என்ய்யா நடந்திச்சு ) கவி Sir என்ன தான் சொல்லியிருப்பார்
(என்டா அக்கா கம்சாவும் விரதம்) துவா மறீன் அவள சமாளிக்க ரொம்ப risk  எடுத்தாங்க.
மறு நாள் காலை 18.10.2012 சென்னை பல்கலைக்கழகத்திற்க்கு  செல்ல அனைவரும் தாயாரானோம்

பஸ்சில தான் போகனும் Sharp  8.00க்கு கீழ வரட்டாம் வராதவங்கள விட்டுட்டு பேயிடுவாங்களாம்.

கவி எழும்பு  7.30 ஆகிட்டு ½ மணித்தியாலம் தான் இருக்கு
(அப்பா ½ மணித்தியாலம் இருக்கு) 

கம்சா துவா மறீன் எல்லாம் 8.00 எண்டா 7.00க்கு Ready ஆகிடுவாங்க அதுகாக நாம அப்பிடி இருக்க முடியுமா என்ன போல தான் முருகா அத அவங்க Term எழுப்பப் பற்ற பாடு .
இருந்தாலும் Sharp 8.15க்கு Ready ஆகிட்டன்

பஸ்சிற்காக காத்திருந்த அந்த மணித்துளிகள் பாடசாலை மாணவர்களின் பரபரப்பு தெருவோர பிச்சைக்காரர்கள் .பஸ்தரிப்புக்கு அருகே குப்பை கூட்டிக் கொன்டிருக்கும் அந்த பென். என்றும் நினைவில்
 பொது இடங்களில் பேசவேன்டாமாம் சென்னை தமிழ் பேசிற என்டா சரி...srilankan என்டு தெரியபடுத்த வேன்டாமாம்

(அது சரி தான்....நாம என்ன வச்சிட்டா வஞ்சகம் பன்னுறம் இருந்தா வரும் தானேங்க)


சென்னை பல்கழைக்கழகம் பிரமாண்டமான கட்டிட அமைப்பு மேற்க்கு வானில் சூரியன் மறையும் போது செவ்வானம் காட்சியளிப்பது போல செங்கற்களினால் சென்னை பல்கழைக்கழகம் அதனுல்தான் அத்தனை அன்பான உறவுகளை சந்திப்பேன் என நான்அ நினைக்கவில்லை அதுக்குப்பிறகு வீட்டு ஞாபகம் வரவில்லை.




காலை உணவை முடித்துக்கொன்டு. வகுப்பரையில் நுழைந்தோம் முதலாவது செயற்திட்டம் சென்னை பல்கழைக்கழகத்தினை சுற்றியுள்ள சேரிக்கு சென்று Rural Reporting செய்ய வேன்டும்.அதற்காக பிரிக்கப்பட்ட குழுவினுள் தான் மகேஸ்வரியை சந்தித்தேன் .
சேரிப்பயணத்தின் முடிவில் எம் நட்புப் பயணம் ஆரம்பித்தது.


சென்னையின் மறுபக்கம் சேரி என சொல்லும் அளவுக்கு குப்பங்களும் சேரிகளும் நிறைந்துள்ளன.நிறைந்திருப்பது குப்பைகள் மடடுமல்ல சோகங்களும் கண்ணீரும் தான் நாம் சென்ற அயோத்திக்குப்பத்தில் பார்த்த நபர்கள் தான் எத்தனை பேர் .தன்னீர் குழாய் அருகே உடுப்புத் துவைத்துக் கொண்டு தன் சோக காவியத்தை பகிர்ந்து கொன்ட அன்னம்மாள்..
வண்டியில் வாழைப்பழங்களை விற்று வாழ்வினை நடாத்தும் 45 வயதுள்ள அப்பெண் .சினிமா கனவுடன் நடனக்குழுவில் இணைய தான் பட்ட கஸ்ரத்தினை வெளிக்காட்டாமல் வெளிப்படுத்தும் இளைஞன்....வீட்டுக்கு வெளியே இருந்து ஈரவிறகுடன் போராடிக் கொன்டிருக்கும் 38 வயதுடைய சிவக்கொழுந்து..கமராவை ஆவலாக தொட்டு பார்த்த சிறுவர்கள் தங்கள் புகைப்படத்தை கமராவில் பார்த்து வெட்கப்பட்டு அக்காவின் பாவாடைக்கு பின் ஒழிந்த அந்த முகம்..11.00 மதியம் குழுவாக சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்ற தந்தை வர்க்கம்..நடு வெயிவில் மீன்களை வைத்து கூவி கூவி விற்க்கும் தாய் வர்கம்..அரசாங்கம் குப்பத்தை விட்டு வெளியேறுமாறுமாறு கேட்டும் தங்கள் கருத்தை முன்வைக்க போராடும் ஒட்டுமொத்த குப்பத்து மக்கள்..அயோத்திக்குப்பமும் வாழ்வும் என்னை பாதித்த அந்த கனங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை....




தொடர்ந்து மெரீனா கடற்கரையில் ஒர் பயணம். மகேஸ் இன் செல்லமான திட்டல் அக்கரையான பார்வை குழந்தை தனமான செய்கை....இதெல்லாத்தயும் விட கதைச்சே வதைப்பாலே வடிவேல படத்தில பாத்திருப்பீங்க சினிமாவில பாத்திருப்பீங்க போஸ்டரில பாத்திருப்பீங்க ஏன் கட்சிக் கூட்டத்தில கூட பாத்திருக்கலாம் சென்னை பல்கழைக்கழகதில பாத்திருப்பிங்களா அது தான அவள்......அடுத்தது மொனிக்கா அக்கா ரொம்ப பிடிச்சவங்க என்டா எனக்கு திட்டவே மாட்டாங்க என்ன செய்தாலும் அன்பா செல்லுவாங்க.........

                                                                                                                                                       தொடரும்....

இப்போதைக்கு இதோட முடிச்சுக்கிறேன் என் பேனா மை முடிந்தாதாலும் type  பன்னி Bour அடிச்சதாலயும்...........(அங்கால என்ன பார்வ அது தான் Cut  பன்னி தொடரும் என்டு போடாச்சுல்ல)

Tuesday, January 10, 2012

உச்சிதனை முகர்ந்தால் "இருப்பாய் தமிழா நெருப்பாய்"


இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்: இருபது பேரை ஒரேயொரு தனி மனிதன் பறந்து பறந்து தாக்கும் அசகாய சூரத்தனம் மிகுந்த ஆவேசமான குத்துச்சண்டைகள்: இல்லாத தமிழ் சினிமா அபூர்வம்: இவை எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒட்டுமொத்தமாக நிராகரித்து
இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.







முற்றிலும் வணிகமயமாகிவிட்ட திரைப்படவுலகில் சமூக அவலங்களைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் ஒரு படத்தைக் கலைநுணுக்கம் கலையாமல் காண்பவர் உள்ளங்களை உலுக்கியெடுத்து விழிகளில் கண்ணீர் வழிய,இருதயத்தில் ,ரத்தம் சூடேற ,இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருந்துவிடாமல் இன நலனக்குத் தன்னளவில் உருப்படியாக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பைத் தந்தாகவேண்டும் என்ற உணர்வை உந்தும் விதத்தில் உருவாக்கியிருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மிகையான நடிப்புக்கு இடமளிக்காமல் வெகு இயல்பாக ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சின்னச் சின்ன அசைவுகளிலும் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தயிருக்கும் கலைஞர்கள் சத்தியராஜ், சீமான், சங்கீதா, நாசர், உச்சிதனை முகர்ந்து நம் வாழ்த்துக்களை வெளிப்படுத்தத் தூண்டும் நீநிகா: இளந் தென்றலாய் வீசியும் எரிமலையாய் பொங்கிப் புரண்டும் பாடல்களில் ரசவாதம் காட்டியிருக்கும் இசைய்மைப்பாளர் இமான் ஒவ்வொரு வார்த்தையிலும் ஈழத் தமிழரின் இதயவலியை இறக்கிவைத்திருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் கூட்டுத் தவத்தில் உருவானதுதான் இந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’
புனிதவதி என்ற பதிமூன்று வயது சிறுமி உடலும் மனமும் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அவளுடைய வாழ்வு எப்படி சீர்குலைந்தது. அவளுடைய இனிமை ததும்பிய குடும்ப உறவுகள் எப்படி நிலைகுலைந்து நிர்மூலமாக்கப்பட்டன என்பதை ஒரு புள்ளியாக வைத்து உலகம் முழுவதுமுள்ள மனித குலத்தின் மனச்சான்றை உசுப்பிவிடும் வகையில் உறுக்கமாகவும் அடிமனதில் உரைந்துகிடக்கும் ஒவ்வொருவருடைய மனிதநேயத்தை மலரச் செய்வதாகவும் கலைநயத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டு ‘உச்சிதனை முகர்ந்தால்’ உருவாக்கம் கொண்டிருக்கிறது.



உலகத்தின் பொதுமொழி மனிதநேயம். இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவரும் தவறாமல் கண்டு கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்தியபடி திரையரங்குகளில் இருந்து வெளியே வருவார்கள் என்பது தின்னம்.இது ஒரு சாதாரணத் திரைப்படம் அல்ல.மனிதம் மறந்த மக்களுக்கும் இன உறவு துறந்த தமிழர்களுக்கும் சினிமா என்னும் சக்திமிக்க ஊடகத்தின் மூலம் நடத்தப்பட்டிருக்கும் ஓர் உயர்ந்த பாடம்.

ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக மென்மையான உணர்வு படைத்த ஒவ்வொரு பெண்ணும் பிள்ளைகளுடன் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டிய படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. இதுபோன்ற நான்கு படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழீழம் உருவாவதற்கு தார்மீக துணையாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.

சிங்கள பயங்கரவாதிகளின் ஈரமில்லாத கொடுங்கோன்மைக்கு தமிழ் சொந்தங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலும் அதிலும் மிகப் பெரும் துயரங்களை சுமந்தவர்கள் குழந்தைகள் தான். அவர்களில் ஒருவரான் புனிதாவின் துயரத்தை அங்குலம் அங்குலமாக நம் கண் முன்னே கொண்டு வந்து சிங்கள பேரினவாதத்தின் அராஜகத்தை நம் நெஞ்சில் பதித்துள்ளார் இயக்குனர் புகழேந்தி.

 ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததை வேடிக்கைப் பார்த்த, அதற்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த நம் நாட்டின் ஆட்சியாளர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படத்தை பார்த்தாவது அவர்கள் தங்கள் பாவத்திற்கு பிரியாசித்தம் தேடுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு பேராசிரியர், ஒரு இல்லத்தரசி இரு மருத்துவர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு திருநங்கை, முகம் தெரியாத ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் மனிதநேயத்துடன் புனிதாவை நேசித்து அச்சிறுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தன. இந்தியாவின் சாதாரண குடிமக்களான இவர்கள் பெரும் சவால்களுக்கிடையில் வெளிப்படுத்தும் மனிதநேயம் ஈழத்தில் தமிழ் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களிடம் இருக்கவில்லை. இவர்களது மனப்போக்கைத் தான் பேராசிரியர் நடசேனின் மாமியார் இப்படத்தில் பிரதிபலிக்கிறார்.
திரைப்படம் என்றாலே விரசம் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் சோகத்தை சித்தரித்து நம் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேட்கையை தூண்டும் வகையில் உச்சிதனை முகர்நதால் அமைந்துள்ளது.


Uchithanai Mukarnthal Press Meet





Uchithanai Mukarnthal Press Meet

Wednesday, January 4, 2012

யாழ்பாடிய மண்ணில் பன்பாடிய பறை ஒலி

கடிவாளம் பத்திரிகை யின்பக்கம் 


aho;kz;iz gw;wp cq;fsJ fUj;J

யாழ்ப்பாணத்துக்கு வர ரொம்ப ஆர்வமாக இருந்தது. கடல்கடந்து இருக்கின்ற அதுவும் தமிழ் நாட்டை போன்று தமிழ் பேசுகின்ற  மக்களை சந்திக்க வந்திருந்த பொழுதுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 


யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இக் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் உருவாக்கப்பட்டன. அந்த மக்கள் நாட்டார் கலைகளின் மூலமாக தமது வாழ்வியலை உலகிற்குக் காட்டியுள்ளனர். பூஜ்ஜியம் என்ற வடிவம் இல்லை என்றால் கணிதத்திற்கு பூஜ்ஜியம் என்ற சொல் இருந்திருக்காது அது போல் தான் இக் கலையும்.
திருமணம், கோயில் திருவிழா, சாவுவீடு போன்ற நிகழ்வுகளிலேயே தப்பு அடித்து ஆடுவார்கள். இம் மரபு மறைந்து போகாது இருப்பதற்காக தமிழகத்தில் தற்போது மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மதுரையில் கொட்டு என்றும், தஞ்சாவூரில்  தப்பு எனவும், சென்னையில் மேளம் என்றும் இதனைப் பல்வேறு பகுதிகளிலும் பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.




நாட்டார் கலைகள் கற்க வந்த மாணவர்களின் ஆர்வம்


யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு இந்தக் கலை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் இந்த 30 வருட காலகட்டத்தில் எத்தனையோ பிரச்சனைகள் மத்தியில் இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். யாரும் இக் கலையை கற்றுக் கொடுக்க இல்லை. முதலில்  இந்த மாணவர்களுக்கு இந்த கலையை சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாவற்றையும் பயின்றார்கள். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.


பறை பற்றியும் சமூகம் பற்றியும் உங்கள் கருத்து.

சமூகத்திலே பறையை ஒரு இழிவாகதான் பார்க்கின்ற ஒரு நோக்கு உள்ளது. கலையை போர் சார்ந்த கலை, சமயம் சார்ந்த கலை. சமூகம் சார்ந்த கலை என 3வகையாக பிரிப்பார்கள். இதில் பறை சமூகம் சார்ந்த கலையாக கூறுவார்கள். இப் பறை சாவுவீடுகளிலேயே அடிக்கப்படுகின்றது. இந்தப்பறை எப்படி இழிவானது என்பதுதான் வரலாறு. ஆனால் ஆதிவாசிகள் பாதுகாப்பிற்காகவே பறையை பயன்படுத்தினார் இவ்வாறு விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையை அடித்து தம்மை பாதுகாத்து கொண்டனர். அத்தோடுஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் உள்ளவர்களை கூப்பிடுவதற்காகவும் பறையை பயன்படுத்தினார்கள். இவ்வாறு ஆரம்பகாலத்தில் பயன்பட்ட பறையை  சமூகத்தில் இன்றைய காலத்தில்  இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முக்கியமாக சமூகத்தில்  பறையடிப்பவர்கள் பறையர்கள் என்றே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் சாவுவீடுகளில் பறை அடிப்பவர்களை வெட்டியான் என்றே அழைப்பார்கள். பறை அடிப்பவர்கள் எல்லாம் பறையர்கள் அல்ல என்பதை முதலில் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்;தில் கொண்டு வந்து ஆடப்பட்ட பறை ஒருமுகப்பறையாகும். இப்பறையை நெருப்பிலே சூடுபண்ணி அடிக்கின்ற ஒரு வாத்தியம் ஆகும். பறை அடிக்கின்றவர்கள் எல்லா வகையான வாத்தியங்களையும் வாசிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
துமிழ் நாட்டில் மட்டுமன்றி  யாழ்ப்பாணத்திலும் மக்கள் பறையை இழிவாக பார்க்கின்ற நிலையை நான் இங்கு வந்து பார்த்தபோது உணர்ந்து கொண்டேன்.

பறையை எப்படி செய்கிறார்கள் 

பறை செய்வதற்கு வேம்பு மாட்டுத்தோல் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக தெரு வோரங்களில் இருக்கும் வேப்பமரங்களையே பயன்படுத்துகிறார்கள். அதற்கு காரணம் யாதெனில் தெருக்களில் இருக்கினற மரங்கள் வாகன சத்தங்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆப்படியான மரங்களில் பறை செய்தால் அதன் சத்தம் அதிகமாக ஒலிக்கும் என்பதகால் தெருக்களில் இருக்கின்ற மரங்களை தேடி பறைக்கு பயன்படுத்துவார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.







சென்னைப்பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழு செயலாளரும் நாட்டார் கலைவிற்பனருமான ஆடலரசு வேணு அவர்கள் முதல் முதலாக தனது தாய்நாட்டுக்கு வெளியே தான் கற்றுக் கொடுத்த யாழ்ப்பாண இளைஞர்களுடன் நடத்துகின்ற முதல் நிகழ்ச்சி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில்  நடைபெற்றது  அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.


தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த  இவர் யாழ்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் , செயற்திறன் அரங்க குழுவினருடன் இணைந்து நாடாத்திய தென்னிந்தி நாட்டார் கலைகளின்  விழா 04/112/2011 அன்றில் இருந்து மூன்று நாட்க்கள் தொடர்சியாக இடம் பெற்றது.. 






கடிவாளம் பத்திரிகை யின்பக்கம் 

Monday, January 2, 2012

ஊடகங்கள் சழுகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் தோற்றுவிக்கும் முரன்பாடுகளும்



தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும்.

இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு தேசவிடுதலைப் போராட்டத்தின் தோற்றம் ஏன் அமைந்தது? அதன் நியாயத்தன்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகள் தெரியும், என்று ஆய்ந்தால் அதற்குக் கிடைக்கும் பதில் என்பது உண்மையிலேயே தலை குனிவைத்தான் தரும். இந்தநிலை அந்தமக்கள் மத்தியில் காணப்படுவதற்கான காரணம் என்ன? என்று பார்த்தால் ஊடகங்கள் மக்கள் மத்தியில் சரியான முறையில் சென்றடையவில்லை என்பதுதான்.

சரி நவீன உலகின் போக்கிற்கமைய மக்களுக்கான நேரமின்மை மக்களின் அன்றாட ஏனைய சிக்கல்கள் மக்களை ஊடகங்களின் பக்கம் ஈர்க்கவில்லை என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மையில் ஊடகங்களின் பங்கு என்பது மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் மக்கள் மொழியில் மக்களுக்கான செய்திகளை அல்லது தகவல்களைக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்.

தாயகத்திலும் சரி புலம்பெயர் தளத்திலும் சரி தமிழ்மொழி பேசுகின்ற ஊடவியலாளர்களில் பெருமளவானவர்களிடம் எங்கள் கருத்தைச் சரியானமுறையில் சரியான தளத்தில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்திற்கு அப்பால் நான் பெரிது நீ பெரிது என்ற எண்ணம் மட்டுமே கூடுதலாக இருந்தது, இருக்கின்றது. எங்காவது யாராவது ஒரு சிலர் மட்டும் நான் அவ்வாறானவன் அல்லன், எனது நோக்கம் முழுவதுமே ஊடகத்தில் மட்டும் எனது புலனைச் செலுத்திச் செயற்பட்டேன் என்று கூறிக்கொள்ளலாம். அது எந்தளவிற்கு வெற்றியைப் பெற்றுத்தரும்? ஊடகங்கள் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை; ஊடகவியலாளர்கள் சரியான முறையில் கையாளப்படவில்லை. அவர்கள் எந்தளவிற்கு முக்கியமானவர்கள் அவர்களை எவ்வாறு கையாளவேண்டும் என்ற பார்வை சரியானமுறையில் இருந்திருக்கவில்லை. களத்திலும் நெருக்கடிகளிலும் நின்று பாடுபட்ட எத்தனை ஊடகவியலாளர்கள் தமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றால் இதற்கெல்லாம் மௌனம்தான் பதில். சிங்கள அரசு ஊடகச் சுதந்திரத்தை எந்தளவிற்கு நசுக்கிவைத்துள்ளது என்பதை மட்டும் வைத்துக் கொண்டே ஊடகங்களின் வீச்சினை எதிர்நோக்க அது எவ்வளவு அச்சம் கொண்டது என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

வன்னிமீதான போர்த்தீவிரத்தின் போது தென்னிலங்கை ஊடகங்கள் ஊடக வலைப்பின்னல் ஒன்றைச் சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இராணுவ ஆய்வாளர்கள் இந்நடவடிக்கைகளுக்கு சிங்கள ஆட்சியாளர்களால் சரியான முறையில் கையாளப்பட்டனர். ஊடகங்களின் மூலம் போர் நகர்வுகளையும் எதிர்த்தரப்புக்கு உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல ஆய்வுகளையும் செய்திகளையும் வெளியிட்ட அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தனர். அதனைவிடவும் சர்வதேச ஊடகங்களைச் சரியான முறையில் கையாண்டு சிங்கள அரசின் மீதான அழுத்தங்களை குறிப்பிட்ட அளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதிய இணையத்தளங்களை நிறுவி அவற்றில் செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிடுவதை மிக முக்கிய பணியாக மேற்கொண்டனர்.

ஆனால் எமது மக்கள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கொன்று குவிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும் விதவைகளாகவும் ஆக்கப்பட்டும் பேரவலத்திற்குள் மூழ்கியிருந்தவேளையில் நாம் ஊடகங்கள் மூலம் சாதிக்க முடிந்தது என்ன? புதிதாக எதனைச் சாதித்தோம்? சரி அந்த வேளையில் சர்வதேசத்தையே ஏறி மிதிப்பது போன்று சிங்கள அரசு தனது ஏளனமான கருத்துக்களை மாறிமாறித் தொடர்ந்து விதைத்து வந்ததே, அந்த விடயங்களைக் கூட ஏன் நாங்கள் பாரிய விடயங்கள் ஆக்க முடியவில்லை?

தமிழ்மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கின்ற பல பத்து இணைத்தளங்களும், பல வானொலிகளும், பல பத்திரிகைகளும் ஏன் ஏராளமான சஞ்சிகைகளும் கூட சர்வதேச நாடுகளில் வெளிவந்தவண்ணமே உள்ளன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தமக்கிடையில் எந்தளவு ஒற்றுமைத் தன்மையை அல்லது ஒருங்கிணைந்த செயற்பாட்டை வைத்திருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பவேண்டும். போரின் தொடக்கம் முதல் இறுதிவரையில் மக்களின் அவலம் என்பது வார்த்தைகளுக்குள் அடக்கிவிடக் கூடிய விடயமல்ல. அந்தவிடயங்களை உள்ளதை உள்ளவாறே அனைவரும் ஒரு தளத்தில் நின்று வெளியிட்டிருந்தாற்கூட போரின் தார்ப்பரியம் சர்வதேச ரீதியில் அன்றே உணரப்பட்டிருக்கலாம். மாறாக ஒவ்வோர் ஊடகமும் தமக்குக் கிட்டியவிதத்தில் தாம் தீர்மானித்த விதத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரே நேரத்தில் முரண்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தமை உண்மையான செய்திகளை ஏனையவர்கள் நம்பிக்கையீனத்துடன் நோக்கியதனை அவதானிக்க முடிந்தது.

சர்வதேச ரீதியில் பல போராட்டங்கள் வெற்றிபெற்றன என்றால் அந்தப் போராட்டங்களின் போக்கினை அல்லது வீச்சினை மேம்பாடடையச் செய்தவை ஊடகங்கள் தாம். தற்போது கூட எங்கள் தாயகம் சிதைக்கப்பட்டு மக்கள் நிர்க்கதியாக வெவ்வேறு திசைகளில் சிதறியுள்ளனர். அவர்களைக் கூட அரவணைக்க ஆற்றுப்படுத்த ஏதாவது சரியான ஊடகம் ஒன்றாவது இல்லையா? என்ற ஏக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது.

நடந்து முடிந்த காலப்பகுதிகளில் ஊடகங்கள் விட்ட குறைகள், சாதித்தவை என விரிவாக நோக்கினால் அது ஆழமான வடுக்களையும் கவலைகளையுமே தந்து நிற்குமே தவிர மாறாக அதன் மூலம் எதனையும் எட்டிவிடப் போவதில்லை.

நாடுகள் கடந்தும் ஊடகங்களின் இமயங்களில் நிற்கக்கூடிய மண்பற்றாளர்கள் பலர் மூத்த ஊடகவியலாளர்களாக இன்னமும் தம்மால் முடிந்தவற்றை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி இளைய துடிப்பான ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொதுவான ஊடகக் கொள்கை உருவாக்கப்படல் வேண்டும், ஊடக அமையம் நிறுவப்படவேண்டும்.

எதிர்வரும் காலங்களின் பிரதிபலிப்பாய் எங்கள் போராட்டம் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் அல்லது வாக்கெடுப்புக்கள் கூட நிகழலாம். அந்தவேளை மட்டும் ஊடகங்களில் கருத்துக்களை எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் திணித்துவிட முடியாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு துரிதமாய் புதிய ஊடக மாற்றங்கள் நிகழவேண்டும். தாயகத்தில் அவலத்துள் சிக்கியிருக்கும் மக்கள் முதல் ஏக்கங்களுடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வரை அனைவரையும் ஒருசேர சங்கமிக்க வைக்கும் வகையிலான புதிய ஊடகங்களின் வருகை என்பது தற்போதைய மிக முக்கிய தேவையாகவுள்ளது.

ஏனைய வழிகளில் சாதிக்கத் தவறியவற்றை நாங்கள் எங்கள் பேனாக்கள் மூலம் சாதிப்போம். சாதனையின் முடிவில் எங்களால் சிந்தப்பட்ட உயிர்விலைகளுக்கும், குருதிவிலைகளுக்கும், கண்ணீர் விலைகளுக்கும், ஏன் வியர்வை விலைகளுக்கும் சரியான அறுவடையைப் பெற்றுக் கொள்வோம். நாங்கள் எதிர்பார்ப்பது போல இம்மாற்றங்கள் போரின் இறுதிக் காலங்களில் தம் உயிர்களை இழந்து விட்ட பல்லாயிரம் மக்களின் உயிர்களோடு தங்கள் உயிர்களையும் இணைத்துக் கொண்ட ஊடகவியலாளர்களின் கனவுகளுக்கு ஆத்மதிருப்தியைக் கொடுக்கும் என்பதுவே உண்மை

Sunday, January 1, 2012

டயரியில் இருந்து (2008/02/12) (12:47am)


lahpapy; ,Ue;J  (2008/02/12) (12:47am)


lahpapy; இUe;J  (2008.02.12) (12:47am)

cile;J rpjwpa இjaj;jpy; இUe;J frpe;j th;zj;ij vLj;J tiuag;gl;l kly;.

இj;jid  tUlj;jpy;>

re;Njh\j;jpd; cr;rf;fl;lk;>

fz;fyq;f itj;j cd;djkhd el;G>

ghrj;jpw;fha; Vq;fpa rpy nehbfs;>

kdij Rikahf;fpa kuzq;fs;>

vjph;ghh;ig Rf;FE}whf;fpa Njhy;tpfs;>

vjph;ghh;fhj Neuk; fpilj;j ntw;wp>

nka;rpyph;f;f itj;j ghuhl;Lf;fs;>  

இjaj;ij fyq;f itj;j mtkhdk;>

இuj;jj;ij ciua itj;j gak;>

cyfj;ij ntWf;;f itj;j Nrhfk;>

vd;id ehNd jd;bj;Jf;  nfhs;Sk; mstpw;f;F Nfhgk;>

Kbe;J Nghdjhf vz;zpa tho;f;if>

rhTtiu nrd;W jpUk;gpa jw;nfhiy Kaw;rp.

md;W fz;zfspy; இUe;J Mnwd tope;j fz;zPh; இj;jid tUlq;fshfpAk; vd;Dk; epw;ftpy;iy fhy Xl;lj;jpy; midj;JNk fiue;J tpl;lJ Rw;wpAs;s gyUf;F fle;J te;j ghijapy; Kl;fNs mjpfk;.epw;fTk; Kbahky; elf;fTk; Kbahky; fhy;Nghd Nghf;fpy; இd;Wtiu.
“md;W tpijapd; mUNf cl;fhe;jpUe;Njd;   mJ jsph; tpl;L tsh;e;J tpUl;rkhfptpl;lJ  இd;W tpUl;rj;jpd; fPo; cl;fhe;jpUf;fpNwd;  jdpikapy;” 

(2008.0.12)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls